மோடி பிரச்சார தொகுதிகளில் 80% வெற்றி.. அமித் ஷா அபாரம்.. 88% வெற்றி.. ராகுல் காந்திக்கு 15% மட்டுமே
பாட்னா: 2025ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் NDA அணி 202 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக தனியாக 89 இடங்களை வென்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் 16 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் மேற்கொண்ட தொகுதிகளில், NDA அணி 97 இடங்களை வென்றுள்ளது. இவற்றில் 44 தொகுதிகள் புதிய வெற்றிகள் ஆகும்.
பிரதமரின் 'ஸ்டிரைக் ரேட்' (அதாவது, அவர் பிரச்சாரம் செய்த தொகுதிகளில் NDA வெற்றி பெற்ற சதவீதம்) 80% ஆக உள்ளது. NDA தலைவர்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஸ்டிரைக் ரேட் அதிகமாக 88% ஆக உள்ளது.

அதே நேரத்தில், மகாகட்சி கூட்டணியின் முக்கிய தலைவர்களின் பிரச்சாரங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிந்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய தொகுதிகளில் 85% இடங்களை மகாகட்சி கூட்டணி இழந்துள்ளது.
இளைய தலைவரான தேஜஸ்வி யாதவின் பிரச்சாரங்களும் குறைந்த வெற்றி விகிதத்தையே கொண்டிருந்தன. இந்தத் தேர்தல் முடிவுகள், NDA தலைவர்களின் களப் பிரச்சார திறனையும், மகாகட்சி கூட்டணி மீதான மக்கள் நம்பிக்கையின் வீழ்ச்சியையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.
பீகார் சட்டசபை தேர்தல் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11, என்று இரு கட்டங்களாக நடந்தது. மொத்த 243 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நவம்பர் 14 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், காங்கிரசுக்கு கிடைத்த அடியை நேரு ஆன்மா கூட விரும்பாது.












Click it and Unblock the Notifications