பீகாரில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி.. பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப்பதிவு! என்ன நடந்தது?
பாட்னா: பீகாரில் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் நடந்த தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், வினாத்தாள் முன் கூட்டியே கசிந்ததாகவும் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக நிதிஷ் குமார் பதவி வகித்து வருகிறார். பீகாரில் கடந்த 13 ஆம் தேதி அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் தேர்வு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தேர்வர்கள் எழுதிய இந்த தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், வினாத்தாள் கசிந்ததாகவும், இதனால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் திரண்டு இருந்த மாணவர்கள், முதல்வர் நிதிஷ்குமார் இல்லம் நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டனர். மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜனசுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்தார். ஜேபி கொலம்பூர் நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்ற போது அதிலும் பிரசாந்த் கிஷோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.
இதற்கிடையே, அனுமதியின்றி கூடியதாகவும் மாணவர்களை கலைந்து செல்லுமாறும் போலீசார் கூறினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த மோதலில் போலீசாரின் ஒலிப்பெருக்கிகளும் சேதம் அடைந்தது.
இதற்கிடையே அனுமதியின்றி கூடியதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த பிரசாந்த் கிஷோருக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "உரிய அனுமதியின்றி ஜன சுராஜ் கட்சி போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இந்த போராட்டத்தில் வன்முறையும் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீசாரின் உடைமைகளை சேதப்படுத்தினர்" என்றனர்.
முன்னதாக மாணவர்கள் மத்தியில் பேசிய பிரசாந்த் கிஷோர், ”தேர்வர்கள் விவகாரத்தை தன்மான பிரச்சினையாக அரசு பார்க்கிறது. காந்தி மைதானம் ஒரு பொதுவான இடம். மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளதை பேச உரிமையில்லை" என்றார்.
பிரசாந்த் கிஷோர் கடந்த அக்டோபர் மாதம் கட்சி தொடங்கினார். அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோர் கட்சி தோல்வி அடைந்தது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications