பீகாரில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி.. பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப்பதிவு! என்ன நடந்தது?
பாட்னா: பீகாரில் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் நடந்த தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், வினாத்தாள் முன் கூட்டியே கசிந்ததாகவும் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக நிதிஷ் குமார் பதவி வகித்து வருகிறார். பீகாரில் கடந்த 13 ஆம் தேதி அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் தேர்வு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தேர்வர்கள் எழுதிய இந்த தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், வினாத்தாள் கசிந்ததாகவும், இதனால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் திரண்டு இருந்த மாணவர்கள், முதல்வர் நிதிஷ்குமார் இல்லம் நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டனர். மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜனசுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்தார். ஜேபி கொலம்பூர் நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்ற போது அதிலும் பிரசாந்த் கிஷோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.
இதற்கிடையே, அனுமதியின்றி கூடியதாகவும் மாணவர்களை கலைந்து செல்லுமாறும் போலீசார் கூறினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த மோதலில் போலீசாரின் ஒலிப்பெருக்கிகளும் சேதம் அடைந்தது.
இதற்கிடையே அனுமதியின்றி கூடியதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த பிரசாந்த் கிஷோருக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "உரிய அனுமதியின்றி ஜன சுராஜ் கட்சி போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இந்த போராட்டத்தில் வன்முறையும் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீசாரின் உடைமைகளை சேதப்படுத்தினர்" என்றனர்.
முன்னதாக மாணவர்கள் மத்தியில் பேசிய பிரசாந்த் கிஷோர், ”தேர்வர்கள் விவகாரத்தை தன்மான பிரச்சினையாக அரசு பார்க்கிறது. காந்தி மைதானம் ஒரு பொதுவான இடம். மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளதை பேச உரிமையில்லை" என்றார்.
பிரசாந்த் கிஷோர் கடந்த அக்டோபர் மாதம் கட்சி தொடங்கினார். அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் பிரசாந்த் கிஷோர் கட்சி தோல்வி அடைந்தது.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications