Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்சியை மொத்தமாக கலைத்த பிரசாந்த் கிஷோர்.. பீகார் படுதோல்வியால் அரசியலை விட்டு விலகும் PK? பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகனைளை வழங்கி வந்த பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் கட்சியை தொடங்கினார். பீகார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட அவரது வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. 2 வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் பெற்ற நிலையில் 236 பேர் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில் தான் பிரசாந்த் கிஷோர் தனது கட்சியில் அமைப்பு ரீதியாக அனைத்து பிரிவுகளையும் கலைத்து நிர்வாகிகளை நீக்கி உள்ள நிலையில் அவர் அரசியலில் இருந்து விலகுகிறாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

பீகாரில் சமீபத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி 123 இடங்களில் வென்றால் தனித்து ஆட்சி அமைக்கலாம். ஆனால் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக 89 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மாறியது.

prashant-kishors-jan-suraaj-party-dissolves-all-organisational-units-after-bihar-assembly-election

இந்த தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. கடந்த பல ஆண்டுகளாக பிரசாந்த் கிஷோர் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார். 2021 சட்டசபை தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து பணியாற்றினார். இதையடுத்து திமுக வென்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது.

இதையடுத்து பீகாரில் பிரசாந்த் கிஷோர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜன்சுராஜ் கட்சியை தொடங்கினார். பீகார் சொந்த மாநிலம் என்பதால் எப்படியாவது வென்று விடலாம் என்று அவர் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக மக்களை சந்தித்து வந்தார். ஊர்வலம், பொதுக்கூட்டங்களை நடத்தினார். கிராமம் கிராமமாக நடந்து சென்றார். அவர் செல்லும் இடங்களில் கூட்டம் கூடியது.

ஆனால் அந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறவில்லை. பீகார் சட்டசபை தேர்தலில் ஜன்சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக 243 தொகுதிகளில் 238 இடங்களில் பிரசாந்த் கிஷோர் வேட்பாளர்களை அறிவித்தார். இதில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. மாறாக 236 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அவரது கட்சி 3.4 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது.

இது பிரசாந்த் கிஷோருக்கு வெறும் மனவருத்தத்தை அளித்துள்ளது. இந்நிலையில் தான் அவர் கட்சியின் அமைப்பு சார்ந்த அனைத்து பிரிவுகளையும் மொத்தமாக கலைத்துள்ளார். இதுதொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் சையத் மாஷிக் உதின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛ஜன்சுராஜ் கட்சியின் அமைப்பு சார்ந்த அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து லெவல் முதல் மாநில அளவிலான அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒன்றரை மாதங்களில் மீண்டும் இந்த அமைப்பு சார்ந்த அனைத்து பிரிவுகளும் மீண்டும் தொடங்கப்படும்'' என்றார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் ஜன்சுராஜ் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் கட்சியின் மாநில தலைவர் மனோஜ் பாரதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தை தொடர்ந்து மேற்கூறிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பிரசாந்த் கிஷோர் அரசியலுக்கு முழுக்கு போடுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் அவர் கட்சி சார்பில் கலைக்கப்படும் அனைத்து அமைப்புகளை ஒன்றரை மாதத்தில் மீண்டும் உருவாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரசாந்த் கிஷோரின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பற்றி அறிய ஒன்றரை மாதம் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+