குடும்பத்தினரை ஓரமாக உட்கார வைத்து விட்டு.. அக்கா தங்கையை.. துப்பாக்கி முனையில்.. வெறிச்செயல்
அக்கா, தங்கையை ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளது
Recommended Video
பாட்னா: குடும்பத்தினரை ஒரு ஓரமாக உட்கார வைத்துவிட்டு, அக்கா, தங்கை இருவரையும் துப்பாக்கி முனையில் இளைஞர்கள் மாறி மாறி நாசம் செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. ஹுசைனாபாத் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஒரு கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சிலோன் ஆறு அருகே அவர்கள் சென்றபோது, சில இளைஞர்கள் இந்த குடும்பத்தினரை வழி மறித்துள்ளனர். குடும்பத்தில் 2 இளம்பெண்களை மட்டும் தனியாக இழுத்து சென்றனர். அவர்கள் 2 பேருமே அக்கா, தங்கைகள்! அதில் அந்த தங்கை ஒரு மைனர் பெண் ஆவாள்!
மீதம் இருந்த குடும்ப உறுப்பினர்களை தனியாக ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டனர். பின்னர் கையில் துப்பாக்கியை எடுத்து வைத்து கொண்டு, அக்கா, தங்கை இருவரையும் அந்த கும்பல் மாறி மாறி நாசம் செய்ய தொடங்கியது.
இதற்கு மூத்த சகோதரி கடுமையான எதிர்ப்பை காட்டினாள். இதனால் அந்த இளைஞர்களுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. அதனால், கையில் இருந்த துப்பாக்கியால் அவளை சுட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசுக்கும் சொல்லப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் பற்றி பிர்புர் பகுதி ஏஎஸ்பி ராம்நாத் குமார் கவுசல் சொல்லும்போது, "பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் 2 பேரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளோம். தப்பி ஓடிய கும்பல் குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் கைது செய்வோம்" என்றார்.












Click it and Unblock the Notifications