கலெக்டர் ஆபீஸை அலற விட்ட அடிதடி சம்பவம்.. ஏலத்திற்கு வந்த மற்ற கட்சியினரை தாக்கிய 12 பேர் கைது!
பெரம்பலூர்: பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கல் குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கொடுக்க வந்த பெரம்பலூர் கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவருமான கலைச்செல்வன் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் ஆகியோரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் திமுகவினர் தடுத்து தாக்கியுள்ளனர்.

மேலும், திமுகவினரைத் தடுக்க முயற்சித்த, கனிம வளத்துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஆனந்தன் ஆகிய அரசு அதிகாரிகளையும், பாதுகாப்பு பணியிலிருந்த டிஎஸ்பி பழனிச்சாமி உள்ளிட்ட காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஏலத்தை ஒத்தி வைத்தார் மாவட்ட ஆட்சியர் கற்பகம்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அராஜகத்தில் ஈடுபட்டு வருபவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுகவுக்கு, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏலத்தில் மற்றவர்கள் பங்கேற்காமல் தடுத்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த சூழலில், அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், திமுக எம்.எல்.ஏவின் உதவியாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், 12 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications