Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரம்பலூரில் பெரிய சோகம்.. ஜோடியாக கிணற்றில் குதித்து உயிரைவிட்ட ஜோடி.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தில் காதல் ஜோடியான யுகேஷ் மற்றும் மணியரசி ஆகியோரின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்பவருடைய மகன் யுகேஷ் (வயது 20). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். யுகேசும், அவரது ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகளான மணியரசியும் என்ற பெண்ணை காதலித்து வந்தனர்.

Love couple commits suicide by jumping into well in Perambalur


இவர்களின் காதல் விவகாரம் 2 பேரின் வீட்டிற்கும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களது காதலுக்கு 2 பேருடைய பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் யுகேசும், மணியரசியும் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் தங்களது வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள். இதையறிந்த அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும் யுகேசையும், மணியரசியையும் தீவிரமாக தேடியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் யுகேசின் மாமாவான ராஜேஷ் என்பவரது வயலில் உள்ள கிணற்றின் அருகே யுகேஷ், மணியரசியின் செருப்புகள் ஜோடியாக கிடந்தன. இதனால் அவர்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம்? என்று சந்தேகமடைந்த உறவினர்கள் இது குறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டார்கள். இதில் முதலில் மணியரசியின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர், சிறிது நேரத்தில் யுகேசின் உடலையும் கிணற்றுக்குள் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

மணியரசி, யுகேசின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதது காண்போரையும் கலங்க வைத்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். போலீசாரின் விசாரணையில், யுகேசும், மணியரசியும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு தங்களது வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பின்னர் விபரீத முடிவெடுத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரம்பலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+