பெரம்பலூரில் பொங்கிய மகிழ்ச்சி.. 10 வருடங்களுக்கு பிறகு நெகிழ்ந்த ம.பி. குடும்பம்! அசத்திய கலெக்டர்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம், இணையத்தில் வெளியாகி பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட வடமாநில குடும்பத்தினரும் நெகிழ்ச்சியுடன் உள்ளனர்..
பெரம்பலூர் தீரன் நகர் எறைய சமுத்திரம் கிராமத்தில், வேலா கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது.. இது ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இடமாகும்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.1,200 மாதந்தோறும் வழங்கப்படுகிறது..இந்த காப்பகத்தில் காப்பாளர், சமையலர், தொழிற்கல்வி பயிற்றுநர், தன்னார்வலர்கள், ஓட்டுநர், பொறுப்பு அலுவலர், காப்பக காவலர்கள் ஆகியோர்களுக்கு அரசின் மூலமாக ஊதியமும் வழங்கப்படுகிறது..
தொழிற்பயிற்சிகள்: மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் காப்பகத்தில் வழங்கப்படும் சேவைகள், உடல்நலம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவ்வப்போது இங்கு கலந்துரையாடுவார்.. அதேபோல, இம்மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பகத்தில் வழங்கப்படும் தொழிற்பயிற்சிகள், பயிற்சி குறித்தும் கேட்டறிவது வழக்கமாகும்.
சமீபத்தில்கூட, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு மற்றும் சேவை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்
கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருந்ததுடன், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த தங்கும் அறைகளை பார்வையிட்டு, படுக்கை அறையில் மெத்தைகள் மற்றும் காற்றோட்டமான சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
கருணை இல்லம்: இந்நிலையில், இந்த வேலா கருணை இல்லம் சிறப்பு மிகுந்த செயல் ஒன்றினை செய்துள்ளது.. அதாவது, மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ளது சட்னா என்ற மாவட்டம்.. இங்கு வசித்து வந்தவர் ராம்லால்.. இவருக்கு 59 வயதாகிறது..
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிப்படைந்த நிலையில் சுற்றித்திரிந்தார். அவரை, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அங்குள்ள வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாகவே மனநலம் சார்ந்த பயிற்சிகளும், மருத்துவ சேவைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த வடமாநில நபர் பூரணமாக குணமாகிவிட்டார்.
பூர்வீகம்: இதற்கு பிறகே, தன்னுடைய பூர்வீகம் என்ன? குடும்ப உறுப்பினர்கள் யார் யார்? வீட்டு முகவரி என்ன? போன்ற விபரங்களை சொல்லியிருக்கிறார்.. இதையடுத்து, அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே திக்குமுக்காடிப்போன குடும்ப உறுப்பினர்கள், பெரம்பலூருக்கு கிளம்பி வந்தார்கள்.. பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், ராம்லாலை, அவருடைய மகன் சஞ்சய்குமாரிடம் ஒப்படைத்தார்... 10 வருஷம் கழித்து தந்தையை பார்த்ததுமே ஒட்டுமொத்த குடும்பமும் ஆனந்த கண்ணீரை பொழிந்தது..
நெகிழ்ச்சி சம்பவம்: தன்னுடைய அப்பாவை, 10 ஆண்டுகளாக பாதுகாப்பாகவும், மருத்துவ சேவை உள்ளிட்ட உதவிகளை வழங்கி, பராமரித்து வந்த தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும், வேலா கருணை இல்ல நிர்வாகிகளுக்கும், சஞ்சய்குமார் தன்னுடைய இரு கைகளையும் கூப்பி நன்றி கூறினார்.. இந்த சம்பவம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications