பெரம்பலூர் அருகே வெரைட்டி வெரைட்டியா.. மின்மோட்டார், தங்க நகைகள், கேமரா.. தூக்கத்தை தொலைத்த மக்கள்
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டத்தில் நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.. இந்த கொள்ளைகளால், தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புலம்புகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில், சமீபகாலமாக அதிக திருட்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது.. சில நாட்களுக்கு முன்பு, சித்தளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர், எலக்ட்ரிக்கல்ஸ் கடையில் திருட்டு நடந்திருந்தது..

எலக்ட்ரீஷியன்: சம்பவத்தன்று இரவு, கடையை மூடிவிட்டு, மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.. உள்ளே சென்று பார்த்தால், டேபிள், மேசையின் லாக்கர்களும் உடைக்கப்பட்டிருந்தன.. லாக்கரில் இருந்த 1700 ரூபாயை மர்மநபர்கள் திருடி சென்றிருக்கிறார்கள். அதிக அளவிலான எலக்ட்ரிக்கல் பொருட்களை திருடலாம் என்று உள்ளே வந்த மர்மநபர்கள், ஏமாற்றமடைந்து, இந்த 1700 ரூபாய் பணத்தை திருடி சென்றிருந்தனர்.
சமீபத்தில்கூட, ஆலத்தூர் தாலுகா டி.களத்தூரை சேர்ந்த விவசாயி மாதவன் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.. இவர் சம்பவத்தன்று, மாடி வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு, திண்ணையில் மனைவியுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, அதிகாலை 5 மணிக்கு மாதவன் எழுத்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தால், பீரோவை உடைத்து, 13 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர்.
ஆலத்தூர்: இதே பகுதியில், அடிக்கடி திருட்டு நடப்பதாகவும், எனவே, திருட்டை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தநிலையில்தான், ஆலத்தூரில் இந்த திருட்டு சம்பவம் நடந்தது.
வீடுகளுக்குள் ஆட்கள் இருந்தாலும், அல்லது பூட்டிவிட்டு வெளியில் சென்றாலும், திருட்டுகள் சர்வசாதாரணமாக நடக்கிறதாம். பெரும்பாலும் விவசாயிகளும் அதிகம் என்பதால், நிறைய பேர் மின்மோட்டார்களை வைத்திருக்கிறார்கள்.. இதனையும் களவாணிகள் விட்டுவைப்பதில்லை என்று புலம்புகிறார்கள்..
கேமராக்கள்: தற்போது மக்காச்சோளம் அறுவடை நடந்து வருவதால், சாக்கில் கட்டப்பட்டு வயலில் வைத்திருக்கும் மக்காச்சோளக்கதிர் மூட்டைகளும் திருடு போய் கொண்டிருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள். விவசாய பொருட்கள் திருட்டு போகக்கூடாது என்பதற்காக கேமிரா பொருத்தப்பட்டிருந்தால், அந்த கேமராவும் திருடிவிடுகிறார்களாம்.
நகை, பணம், மின்மோட்டார்கள் களவாடப்பட்டு வரும் நிலையில், டீசல் மற்றும் இரும்பு பொருட்களும், லாரிகளில் உள்ள பேட்டரிகளும், திடீர் திடீரென மாயமாகிவிடுகிறதாம்.. விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், வியாபாரிகள் என ஒவ்வொருவருக்கும் ஸ்கெட்ச் போட்டு, அவர்கள் அசந்த நேரத்தில் இத்தகையை திருட்டு நடப்பதாக கூறுகிறார்கள்.
கோரிக்கை: இதனால், வெளியூர் செல்லவும், பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள்.. அப்படியே வெளியூர் சென்றாலும், இரவுக்குள் வீடு திரும்பும் நிலைமைக்கு, கதிகலங்கி உள்ளனர். எனவே, இந்த திருட்டு சம்பவங்களை விரைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து, காவல்துறை அதிரடியை கையில் எடுத்துள்ளது..!!
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications