இரண்டு பேருந்துகளில் கேரளாவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட 50 புதுவை பல்கலை. மாணவர்கள்..
புதுச்சேரி: கொரோனா ஊரடங்கால் புதுவை மத்திய பல்கலைகழகத்தில் சிக்கிதவித்து வந்த 50 பல்கலைகழக மாணவர்களை, அவர்களது சொந்த ஊரான கேரள மாநிலத்திற்கு இரண்டு பேருந்துகளில் முதலமைச்சர் நாராயணசாமி அனுப்பி வைத்தார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் குறையாததால் 4 வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் வேலை, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அதிகளவில் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்துக்கு செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. புதுச்சேரி அரசும் தனியாக http://welcomeback.py.gov.in இணையதளம் தொடங்கி அவர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் கல்வி, வேலை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று கொரோனா ஊரடங்கால் சிக்கி தவித்து வந்த புதுச்சேரியை சேர்ந்த 107 பேரை மாநில அரசு புதுச்சேரிக்கு கொண்டுவந்துள்ளது. அதேபோல் புதுச்சேரியில் இருந்த 424 பேர் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 14 ஆம் தேதி முதல் 2,448 பேர் புதுச்சேரியில் இருந்து வெளியே செல்வதற்கும், 1,080 பேர் புதுச்சேரிக்குள் வருவதற்கும், அவசர தேவைக்காக 2,034 பேர் என மொத்தம் 5,562 பேருக்கு இதுவரை ஆன்லைன் மூலம் இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைகழகத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த 50 மாணவர்கள் தங்களது ஊருக்கு செல்ல உதவுமாறு முதலமைச்சர் நாராயணசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து நேற்று மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, இரவு புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு பேருந்துகளில் முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் 50 மாணவர்களும் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம், மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications