ஒரே பரபரப்பு! திமுக எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து வந்த புகை! புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் தீ விபத்து
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக அலுவலகம் உள்ளது.
இந்நிலையில் உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, இன்று வழக்கம் போல் சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் தொகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த அறையில் திடீரென புகை கிளம்பியது. இதையடுத்து உடனே சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி உள்ளிட்ட அனைவரும் அந்த அறையைவிட்டு வெளியேறினர்.
பின்ன வெளியே வந்து பார்த்தபோது, அந்த அறையின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த ஏசி இயந்திரம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.
உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கூறுகையில், வேண்டுமென்றே தனது அறையில் பழுதான ஏசி இயந்திரம் பொருத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.
தமிழக சிலைகளை மீட்டெடுத்த பிரதமருக்கு நன்றி - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்