Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CBI விசாரணையா? CPI விசாரணையா? குழம்பிய கட்சியினர்! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சையை கிளப்பிய பதாகை

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுக நடத்திய போராட்டத்தில் CBI விசாரணை வேண்டும் என்பதற்கு பதில், CPI விசாரணை வேண்டும் என்று அச்சிடப்பட்ட பதாகைகளை அதிமுகவினர் ஏந்தியிருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

Kallakurichi Puducherry AIADMK illicit liquor

ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். முதலில் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்த நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 57 அக உயர்ந்திருக்கிறது.. தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மதுவிலக்கு பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பாக்கெட்டில் சாராய விற்பனை தமிழகத்தின் பல பகுதிகளில் படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இப்படி இருக்கையில்தான் கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் குடித்த 57 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடி ஆக்ஷனில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை ஷ்ரவண் குமார் ஜடாவத்தை பணியிடமாற்றம் செய்தும் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்குப் பிரிவையே கூண்டோடு சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோல உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இருப்பினும் விஷ சாராய மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முன்கூட்டியே இதனை தடுக்க தவறியதாக தமிழக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புதுவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 'CBI' விசாரணை வேண்டும் என்பதற்கு பதிலாக 'CPI' விசாரணை வேண்டும் என்று அச்சிடப்பட்ட பதாகையை அதிமுகவினர் ஏந்திருப்பது சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் பலர் கட்சி நிர்வாகிகளை விமர்சித்துள்ளனர்.

அதேபோல தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தாலும், கரூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மீது நாளை தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. எனவே, அவர் தலைமறைவாக இருப்பதால் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+