அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய ஹேப்பி நியூஸ்.. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எடுத்த பெரிய முடிவு
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்தால், இந்த ஆண்டே புதுச்சேரியிலும் அரசு பள்ளி மாணவர்கள் கணிசமாக மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில்வதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதேபோல் புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க கடந்த திமுக, காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. அப்போதைய காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்கு அனுப்பினார். அதன் பின்னர் இந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ளது. தமிழ்நாட்டை போல் புதுச்சேரியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என புதுவை அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன.
இந்நிலையில் ஆளுநர் தமிழிசையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ரங்கசாமியை கேட்டுக்கொண்டார். இதையடுத்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவை கேபினட் அறையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள், தலைமை செயலர், அரசு செயலர்கள் பங்கேற்றனர். : புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அமைச்சரவை கூட்டத்துக்கு பின் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பரிந்துரை, துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பி வைக்க உள்ளோம். இந்த மசோதாவிற்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்த பின்னர், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் 37, பல் மருத்துவம் 11, கால்நடை 4 மருத்துவ இடங்கள் கிடைக்கும்.
கடந்த ஆட்சியில் அமைச்சரவைக்கும், ஆளுநருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டது. தற்போது துணைநிலை ஆளுநர் இந்தக் கோப்புக்கு அனுமதியளிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதைத் தொடர்ந்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்புவோம்.
இம்முறை அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். இந்த ஆண்டே அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மருத்துக் கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவோம். பின்னர் தொழில்படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் தொடர்பாக கல்லுாரியில் சேரும்போது அறிவிப்போம்" என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications