முதலில் மதுக் கடை திறப்பு நேரம் குறைப்பு.. படிப்படியாக மதுவிலக்கு.. நாராயணசாமி அதிரடி!
புதுச்சேரி: புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு நேரத்தை குறைத்து, படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தபடும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதுச்சேரி சமூக நல வாரியம், தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் இணைந்து ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் கல்வித்துறை இயக்குனர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.

கருத்தரங்கை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியை போதைப்பொருள் இல்லா மாநிலமாக மாற்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
புதுச்சேரிக்கு கஞ்சா எங்கிருந்து வருகிறது என நன்றாக தெரியும். புதுச்சேரியில் திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு பெண் தாதா கஞ்சா விற்பனை செய்கிறார். ரெயில் மூலம் கஞ்சா புதுச்சேரிக்கு வருகிறது. சிறுவர்கள் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு படிப்போடு சேர்த்து நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டும். அவர்களை கண்காணிக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு என்றார். மேலும் புதுச்சேரியில் மதுவை ஒழிக்க நினைக்கிறோம். ஆனால் அரசுக்கு வருமானம் அதிலிருந்துதான் வருகிறது.
மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு போதுமான நிதியை தருவதில்லை. எனவே நம்மால் மதுவை உடனடியாக ஒழிக்க முடியவில்லை. அதனால் முதலில் மதுக்கடை திறப்பு நேரத்தை குறைத்து, பின்னர் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications