புதுச்சேரியில் இருந்து கேரளா சென்ற விமானநிலைய ஊழியருக்கு கொரோனா.. விபத்து மூலம் உறுதியானது
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற விமான நிலைய ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் அவர் வசித்து வந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுவை சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், காரைக்கால் மாவட்டம் சுரக்குடியை சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு 2 நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என வந்துள்ளது. அவருக்கு மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா தொற்று இல்லை என வந்தால் அவர் வீட்டிற்கு அனுப்பப்படுவார்.

புதுச்சேரியில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்றிருந்த 11 பேர் மற்றும் மாணவர்கள் 4 பேரும் இன்று புதுச்சேரிக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் புதுச்சேரி இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவில் 14 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார்கள்.
மேலும் புதுச்சேரி கென்னடி நகரை சேர்ந்த 28 வயது நபர் கேரள மாநிலம் கண்ணூர் விமானநிலையத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த14 ம் தேதி புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் கண்ணூர் சென்றபோது அங்கு விபத்தில் சிக்கியுள்ளார். அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரியில் அவர் வசித்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications