புதுச்சேரியில் இருந்து கேரளா சென்ற விமானநிலைய ஊழியருக்கு கொரோனா.. விபத்து மூலம் உறுதியானது
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற விமான நிலைய ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் அவர் வசித்து வந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுவை சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், காரைக்கால் மாவட்டம் சுரக்குடியை சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு 2 நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என வந்துள்ளது. அவருக்கு மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா தொற்று இல்லை என வந்தால் அவர் வீட்டிற்கு அனுப்பப்படுவார்.

புதுச்சேரியில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்றிருந்த 11 பேர் மற்றும் மாணவர்கள் 4 பேரும் இன்று புதுச்சேரிக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் புதுச்சேரி இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள சிறப்பு பிரிவில் 14 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார்கள்.
மேலும் புதுச்சேரி கென்னடி நகரை சேர்ந்த 28 வயது நபர் கேரள மாநிலம் கண்ணூர் விமானநிலையத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த14 ம் தேதி புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் கண்ணூர் சென்றபோது அங்கு விபத்தில் சிக்கியுள்ளார். அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரியில் அவர் வசித்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications