புதுச்சேரியில் 9 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

மத்திய அரசின் உத்தரவின்படி புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: மத்திய அரசின் உத்தரவின்படி புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய மாவட்டங்களில் 9 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது.

Recommended Video

    புதுச்சேரியில் மொத்தம் 9 மையங்கள்.. கொரோனா தடுப்பூசி ஒத்திகை...!

    புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 38 ஆயிரத்து 164 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 37 ஆயிரத்து 165 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 633 உயிரிழந்துள்ளனர்.

    Covid-19 vaccine dry run today in Puducherry

    புதுச்சேரியில் மட்டும் 30 ஆயிரத்து 488 பேரும், காரைக்காலில் 3 ஆயிரத்து 790 பேரும், ஏனாமில் 2 ஆயிரத்து 102 பேரும், மாகியில் ஆயிரத்து 784 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி சட்டசபை அருகே உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவமனை, தட்டாஞ்சாவடி ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரி, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனை, கோரிமேடு இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு நலவழி மையம் ஆகிய 3 இடங்களிலும், ஏனாம் அரசு மருத்துவமனை, மாகி அரசு மருத்துவமனை என மாநிலம் முழுவதும் மொத்தம் 9 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+