தமிழ்நாடு ரூட்டில் புதுச்சேரி! ஆளுநர் தமிழிசை தேநீர் விருந்து.. திமுக, காங்கிரஸ் புறக்கணிப்பு
புதுச்சேரி: தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
Recommended Video
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஆளும் அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. தமிழகத்திலும் கிட்டதட்ட அதேநிலை தான்.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடக்கம் முதலே சுமுகமான உறவு இல்லை.

தமிழக அரசு
தமிழ அரசு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது. நீட் விலக்கு தொடங்கி 11 தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை திமுக எம்பிகள் நாடாளுமன்றத்திலும் எழுப்பி இருந்தனர். மேலும் தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தேநீர் விருந்து
இந்தச் சூழலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் தேநீர் விருந்தை அறிவித்திருந்தார். இருப்பினும், இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதேபோல திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மமக ஆகிய கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. அதேநேரம் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்றன.

புதுச்சேரி
இதற்கிடையே தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் ஆளுநர் மாளிகை சார்பில் தேநீர் விருந்து அறிவிக்கப்பட்டு இருந்தது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

புறக்கணிப்பு
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதேபோல காங்கிரஸ் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவித்தார். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. புதுச்சேரிக்குத் தேவையான நிதியை மாநில அரசிடம் இருந்து பெற்றுத் தர ஆளுநர் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications