இ சிகரெட்டிலும் புற்று நோய் வரும்.. கிரண் பேடி கவலை.. புதுச்சேரியில் தடை வருகிறது!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புகைப்பிடிப்பதற்கு மாற்றாகவும், தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கும் உள்ளவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கும் இ-சிகரெட் கண்டுபிடிக்கப்பட்டது.ஆனால், சிகரெட்டின் தீமைகள் இதில் இல்லை என்று கூறப்பட்டாலும், இதுவும் தீங்கு விளைவிக்கிறது என்று உலக சுகாதாரத்துறை கூறியது சர்ச்சையாகி உள்ளது.

எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கள், இ சிகரெட்டுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இது சிகரெட்டை போன்றே வடிவமைப்புடைய ஒரு மின்னணு கருவி ஆகும். இதை பயன்படுத்தினால் புகைப்பதை போன்றே ஒரு திருப்தி கிடைக்கும். ஆனால் இ-சிகரெட் எந்த நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டதோ அதற்கான நன்மைகள் எதுவும் ஏற்படவில்லை.

இ-சிகரெட்டை பயன்படுத்தபவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கதிலிருந்தும் தங்களை மாற்றிகொள்ளவில்லை. மாறாக இ-சிகரெட்டை புகைப்பதால் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

புற்று நோய் வரும்

புற்று நோய் வரும்

மேலும் இதிலுள்ள பார்மால்டி ஹைட் எனும் வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்குவது மட்டுமல்லாம், இ-சிகரெட்டை புகைப்பவர்களால் அருகில் இருப்பவர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

தடை வருமா

தடை வருமா

தமிழகம், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இ-சிகரெட்டிற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரையில் ஒரு சுற்றுலா நகரம் என்பதால் இ-சிகரெட் சர்வசாதாரணமாக புழக்கத்தில் உள்ளது.

இங்கும் தேவை தடை

இங்கும் தேவை தடை

இ-சிகரெட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதால் அவற்றை உடனடியாக புதுச்சேரியிலும் தடை செய்ய வேண்டுமென சமூக அமைப்புகள் அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்துவந்தன. பல்வேறு தரப்பிலிருந்து வந்த தொடர் அழுத்தத்தின் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் இ-சிகரெட்டை தடை செய்வதென சுகாதாரத்துறை முடிவு செய்து அதற்கான கோப்புகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பி வைத்தது.

புதுவையில் தடை வருகிறது

புதுவையில் தடை வருகிறது

தற்போது இ-சிகரெட்டை தடை செய்வதற்கான கோப்பிற்கு கிரண்பேடி ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் முழுமையாக இ-சிகரெட்டை தடை செய்து அதிகாரப்பூர்வமாக புதுச்சேரி அரசு விரைவில் அரசாணை வெளியிட உள்ளது.

இதையும் செய்ங்க

இதையும் செய்ங்க

இ-சிகரெட்டை போன்றே புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து சட்டவிரோதமாக புழக்கத்தில் உள்ள கஞ்சா விற்பனையையும் அரசு தீவிரமாக கண்காணித்து தடை செய்ய வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+