இ சிகரெட்டிலும் புற்று நோய் வரும்.. கிரண் பேடி கவலை.. புதுச்சேரியில் தடை வருகிறது!
புதுச்சேரி: புகைப்பிடிப்பதற்கு மாற்றாகவும், தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கும் உள்ளவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கும் இ-சிகரெட் கண்டுபிடிக்கப்பட்டது.ஆனால், சிகரெட்டின் தீமைகள் இதில் இல்லை என்று கூறப்பட்டாலும், இதுவும் தீங்கு விளைவிக்கிறது என்று உலக சுகாதாரத்துறை கூறியது சர்ச்சையாகி உள்ளது.
எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கள், இ சிகரெட்டுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இது சிகரெட்டை போன்றே வடிவமைப்புடைய ஒரு மின்னணு கருவி ஆகும். இதை பயன்படுத்தினால் புகைப்பதை போன்றே ஒரு திருப்தி கிடைக்கும். ஆனால் இ-சிகரெட் எந்த நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டதோ அதற்கான நன்மைகள் எதுவும் ஏற்படவில்லை.
இ-சிகரெட்டை பயன்படுத்தபவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கதிலிருந்தும் தங்களை மாற்றிகொள்ளவில்லை. மாறாக இ-சிகரெட்டை புகைப்பதால் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

புற்று நோய் வரும்
மேலும் இதிலுள்ள பார்மால்டி ஹைட் எனும் வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்குவது மட்டுமல்லாம், இ-சிகரெட்டை புகைப்பவர்களால் அருகில் இருப்பவர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

தடை வருமா
தமிழகம், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இ-சிகரெட்டிற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரையில் ஒரு சுற்றுலா நகரம் என்பதால் இ-சிகரெட் சர்வசாதாரணமாக புழக்கத்தில் உள்ளது.

இங்கும் தேவை தடை
இ-சிகரெட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதால் அவற்றை உடனடியாக புதுச்சேரியிலும் தடை செய்ய வேண்டுமென சமூக அமைப்புகள் அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்துவந்தன. பல்வேறு தரப்பிலிருந்து வந்த தொடர் அழுத்தத்தின் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் இ-சிகரெட்டை தடை செய்வதென சுகாதாரத்துறை முடிவு செய்து அதற்கான கோப்புகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பி வைத்தது.

புதுவையில் தடை வருகிறது
தற்போது இ-சிகரெட்டை தடை செய்வதற்கான கோப்பிற்கு கிரண்பேடி ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் முழுமையாக இ-சிகரெட்டை தடை செய்து அதிகாரப்பூர்வமாக புதுச்சேரி அரசு விரைவில் அரசாணை வெளியிட உள்ளது.

இதையும் செய்ங்க
இ-சிகரெட்டை போன்றே புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து சட்டவிரோதமாக புழக்கத்தில் உள்ள கஞ்சா விற்பனையையும் அரசு தீவிரமாக கண்காணித்து தடை செய்ய வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications