Exclusive: எனது கவலையெல்லாம்.. என் மீதான நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே -சந்திர பிரியங்கா..!
புதுச்சேரி: தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை முறையாக பயன்படுத்தி புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உழைப்பேன் என உறுதி அளித்திருக்கிறார் அமைச்சர் சந்திர பிரியங்கா.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சந்திர பிரியங்காவிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக பேசிய போது பல்வேறு விவகாரங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.
அதன் விவரம் பின்வருமாறு;

புதுச்சேரி அரசு
''சமூகத்தில் பெண்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். பெண்களுக்கு சம உரிமை வழங்கக்கூடியவர். எனக்கு புதுச்சேரி அமைச்சரவையில் இடம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல் ஒரு வித கவலையையும் தந்துள்ளது. ஆம், என் மீதான நம்பிக்கையை காப்பாற்றி எனது திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது.''

அமைச்சரவை
''இன்னும் போர்ட்ஃபோலியோ ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஓரிரு நாட்களில் ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எந்த துறையானாலும் சரி அந்த துறையின் மூலம் புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கு உழைப்பேன். தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், இங்கு மக்கள் எளிதாக எங்களை இங்கு அணுகமுடியும். தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பெயரும் எனக்குத் தெரியும்.''

நம்பிக்கை
''புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமியை பொறுத்தவரை எந்தவொரு செயல்பாடுகளிலும் என்கரேஜ் தான் செய்வார், யாரையும் அவர் டிஸ்கரேஜ் செய்யமாட்டார். இதனால் எத்தகைய சவால்களையும் என்னால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை நம்பி முதலமைச்சர் தந்துள்ள இந்த பொறுப்பில் மிகச் சரியாக செயல்படுவேன்.''

விவசாயக் குடும்பம்
''எனது குடும்பத்தை பொறுத்தவரை எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் பிஸினஸ் செய்தாலும் எங்களது பிரதான தொழில் விவசாயம் தான். அப்பா சந்திரகாசு 2011-ம் ஆண்டு விவசாயத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். இதனிடையே, நான் அரசியலில் இருந்தாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் விவசாயப் பணிகளை எங்கள் தோட்டத்தில் மேற்கொள்வேன். பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.''
இவ்வாறு புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா ஒன் இந்தியா தமிழிடம் பேசிய போது கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications