ஒழுங்கா படிச்சு பாஸ் ஆகாமல், அரியர்ஸ் வைத்து.. ஊருக்குப் போகாமல் கஞ்சா விற்ற தெ. ஆ. மாணவர்கள்!
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கஞ்சா விற்ற வெளிநாட்டு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் புதுச்சேரியில் தங்கி கல்வி பயின்று வருவதாலும் பல்வேறு போதை பொருட்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. அந்தவகையில் புதுச்சேரி அருகே உள்ள ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வெளிநாட்டு கும்பல் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் சோதனை
இதனையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 பேர் மொத்தமாக கஞ்சாவை விற்று கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை சுற்றி வளைத்த போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

கஞ்சா, செல்போன்கள் பறிமுதல்
அவர்களிடம் இருந்து 26 பொட்டலங்கள் உள்ளிட்ட சுமார் 1.25 கிலோ எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5400 பணமும், 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

வெளிநாட்டு மாணவர்கள்
விசாரணையில், பிடிபட்டவர்கள் ஆப்ரிக்கா நாட்டின் காங்கோ பகுதியைச் சேர்ந்த பீஸ்ஜான, மிசோயோ ஆலன், ருவாண்டாவை சேர்ந்த சீரே கில்பர்ட் ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் பீஸ்ஜான் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிடெக் படித்து வந்துள்ளார்.

கஞ்சா போதை
அதே கல்லூரில் பீஸ் ஜானுக்கு ஜூனியராக சீரே கில்பர்ட் படித்து வந்துள்ளார். அப்போது நண்பர்களான இருவருக்கும் இடையே கஞ்சா பழக்கம் ஏற்பட்டுள்ளது. பீஸ் ஜான் அரியர்ஸ் வைத்ததால் பிடெக் முடிக்க முடியாமல், சொந்த நாட்டிற்கு திரும்ப முடியவில்லை.

சேலத்தில் கஞ்சா விற்பனை
அதனால் அவர் புதுச்சேரி அருகே உள்ள ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். அவருக்கு கஞ்சா பழக்கம் இருந்து வந்துள்ளதால் அடிக்கடி சேலம் சென்று கஞ்சா வாங்கி வந்து பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அறிந்த சிலர் பீஸ்ஜானிடம் கஞ்சா கேட்டுள்ளனர்.

அதிக விற்பனை
இதையடுத்து அந்த பகுதியில் கஞ்சாவுக்கு அதிக மவுசு இருப்பதை அறிந்த பீஸ் ஜான் சேலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து ஆலங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என பலரிடம் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவருடன் அவரது நண்பர்களான மிசோயோ ஆலன், சீரே கில்பர்ட் ஆகியோரும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

வார விடுமுறை விற்பனை
மிசோயோ ஆலன் ஐதராபாத்திலும், சீரே கில்பர்ட் சேலத்திலும் உள்ள கல்லூரியில் தற்போது படித்து வரும் நிலையில் வார விடுமுறையில் ஆலங்குப்பம் வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இந்தியாவில் தங்குவதற்கான விசா, பாஸ்போர்ட் வைத்துள்ளனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications