அரசு பள்ளியில் படித்த மாணவி சரண்யா.. ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்.. அமைச்சர், கலெக்டர் பாராட்டு
காரைக்கால்: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 36 வது இடத்திலும் புதுச்சேரி மாநிலத்தில் முதலிடத்திலும் பிடித்த சரண்யாவிற்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.*
Recommended Video
2019-ம் ஆண்டுக்கான மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் காரைக்காலைச் சேர்ந்த ஆர்.சரண்யா அகில இந்திய அளவில் 36-வது இடத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் முதல் இடத்தையும் சரண்யா பிடித்துள்ளர்.

3வது முயற்சி
காரைக்கால் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஏ.ராமச்சந்திரன்- அமுதா தம்பதியர் மகள் சரண்யா. இவர் தனது 26 வது வயதில் 3 வது முயற்சியில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவரது தாயார் அமுதா நாகப்பட்டினம் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். ராமச்சந்திரன் கப்பலில் வேலை செய்து வருகிறார்.

புதுவையில் முதலிடம்
அரசு பள்ளியில் படித்த சரண்யா தனது சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 36 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

கலெக்டர் பாராட்டு
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சரண்யாவிற்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, காவல் கண்கானிப்பாளர்கள் வீரவல்லவன், ரகுநாயகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சரண்யாவிற்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார்கள்.

மாணவர்கள் சாதிக்கலாம்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரண்யா "அரசு பள்ளியில் படித்ததால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறைகளை கற்றுக்கொள்ள முடிந்தது மேலும் பல்வேறு ஊக்கங்களை கொடுத்தால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இந்த சாதனையை அடைவார்கள் என்றும், தமிழ் பிடித்த மொழி என்பதால் தமிழ் நாட்டில் தான் பணியாற்ற விரும்புவதாகவும், எதையும் சாதிக்கலாம் என்ற முயற்சியுடம் முயன்றால் சாதனைபடைக்கலாம். கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன்"' என்றார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications