அனுமதியின்றி துவக்கினால் ஹைட்ரோ கார்பன் திட்ட பணிகளை தடுப்போம்.. புதுவை முதல்வர் திட்டவட்டம்
புதுவை: மாநில அரசின் அனுமதியின்றி புதுவை, காரைக்கால் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தால், அப்பணிகளை தடுத்து நிறுத்துவோம் என புதுவை முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நேரு நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று கட்சியினர் மத்தியில் பேசிய அவர் சுதந்திரத்திற்கு பின் நேருநாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தார். நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அணைகள், மின்நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்ததை நினைவு கூர்ந்தார்

அண்மையில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கத்திற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என கருதி தான் தேர்தலில் நிறுத்தினோம். கட்சிதலைவர்கள், தொண்டர்கள் இரவு, பகலாக பாடுபட்டதால் அவர் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நம் மீது மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பணியும், பொறுப்பும் நமக்கு உள்ளது என்றார். மோடி மீண்டும் வெற்றி பெற்றவுடன் அனைத்து மாநில வளர்ச்சிக்கும் பாடுபட போவதாகவும், அனைத்து மாநிலங்களுக்கும் மக்கள் நலத்திட்டங்கள் பாகுபாடின்றி நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
எனவே மோடியை நேரில் சந்தித்து புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையளான நிதி மற்றும் திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை விடுக்க உள்ளதாக கூறினார். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தால் புதுவை மாநிலம் சார்பாக யாராவது ஒருவரை பங்கேற்க செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
வேதாந்தா நிறுவனத்திற்கு புதுவை, காரைக்கால் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. மாநில அரசு சார்பாக நாம் இதுவரை எவ்வித அனுமதியும் தரவில்லை.
நம் அனுமதி இல்லாமல் நம் மண்ணிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க முடியாது. அப்படி மாநில அரசின் அனுமதி இல்லாமல் பணி ஏதேனும் துவக்கப்பட்டால், அது தடுத்து நிறுத்தப்படும் என உறுதிபட கூறினார். இதே வாக்குறுதியை தாம் சட்டமன்றத்திலும் அளித்துள்ளதாக நாராயணநாமி கூறியுள்ளார்
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications