யாரையும் புண்படுத்தும் எண்ணமே எனக்கு இல்லைங்க.. பிறந்த நாளில் கிரண் பேடி பளிச் பேச்சு

Subscribe to Oneindia Tamil

புதுவை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் கிரண்பேடியின் பிறந்த நாள் ஊழியர்களால் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர் யாரையும் புண்படுத்துவது தமது நோக்கமல்ல என்றார்.

துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் பிறந்த நாளையொட்டி புதுவை ஆளுநர் மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் கிரண் பேடியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. பிறந்த நாளையொட்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் வழிபட்ட கிரண்பேடி, பின்னர் கேக் வெட்டி ஆளுநர் மாளிகை ஊழியர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

It is not my intention to hurt anyone.. Kiran Bedi speech on her birth day

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. புதுச்சேரிக்கு சேவை செய்வதே எனது எண்ணம். மக்களின் வரிப்பணம் மக்களுக்கு நேரிடையாக முழுமையாக சென்றடைய வேண்டும், அதுவே என் நோக்கம் என்றார்.

It is not my intention to hurt anyone.. Kiran Bedi speech on her birth day

மேலும் பேசிய கிரண்பேடி, தனது பிறந்தநாளில் வேண்டிக்கொள்வது புதுச்சேரியை பசுமையாகவும் நீர்நிறைந்த மாநிலமாக மாற்றவேண்டும் என்பதே. இது எனது கனவு ஆகும். இதற்கு என்னோடு இணைந்து செயல்படுங்கள் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார். கிரண்பேடியின் பிறந்தநாளுக்கு தலைமை செயலர் அஸ்வனிகுமார், டிஜிபி சுந்தரி நந்தா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். தொடர்ந்து ஏராளமான பொதுமக்களும் ஆளுநர் மாளிகைக்குள் வந்து கிரண்பேடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

It is not my intention to hurt anyone.. Kiran Bedi speech on her birth day

முன்னதாக கனகன் ஏரியில் ஆய்வு மேற்கொண்ட கிரண்பேடி அங்கிருந்த பொதுமக்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். முன்னதாக தனது 70வது பிறந்த நாளையொட்டி மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் கிரண்பேடி.

It is not my intention to hurt anyone.. Kiran Bedi speech on her birth day

அவர் எழுதியிருந்த பிறந்த நாள் கடிதத்தில் எனது 70-வது பிறந்தநாளை, புதுச்சேரிக்கு அர்ப்பணித்துள்ளேன். புதுச்சேரியை பசுமையாக மாற்ற, நானும், கவர்னர் மாளிகை குழுவும் தொடர்ந்து பயணிக்க உள்ளோம். ஒவ்வொரு வார இறுதியிலும், ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கு, மரக்கன்றுகளை நடும் பணியில், கவர்னர் மாளிகை குழு செயல்படும். இப்பணியில், மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், உட்பட அனைவரும் பங்கேற்கலாம் என கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+