Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அள்ளி அள்ளி வீசப்பட்ட மாம்பழங்கள்.. காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா கோலாகலம்

Subscribe to Oneindia Tamil

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட உலகப் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆயத்தில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டில் மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றது. உலகப் பிரதித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள காரைக்கால் அம்மையார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்தக் கோயிலில் அம்மையாரே மூலவராக இருக்கிறார். அடியாராக வந்த சிவபெருமானுக்கு புனிதவதி அம்மையார் மாங்கனி படைத்ததையும், புனிதவதிக்கு சிவபெருமான் மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமியையொட்டி மாங்கனித் திருவிழா கொண்டாடப்படுகிறது.

Karaikal Mangani festival Thousands of devotees attend the mango festival at Karaikal Ammaiyar Temple Karaikal maangani thiruvizha mangani festival Karaikal Mango Festival Mango Thiru Viva Karaikal Ammaiyar Temple Mango Festival Thousands of Devotees Participate Karaikal Festival Mango Festival Devotees Worship by Throwing Mangoes Karaikal Mangani festival 3 9 500 Thousands of devotees participated in the world-renowned Karaikal Ammaiyar Temple Mango Festival and worshipped the Lord

நடப்பு ஆண்டிற்கான மாங்கனி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் மாலையில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று காலை பரமதத்தருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு பிச்சாடனர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு பிச்சாடனர் வீதி உலா நடைபெற்றது. மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிவபெருமான் சித்தாண்டவர் வேடத்தில் காரைக்கால் அமையார் ஆலயத்தில் அமுதபடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான பவளக்கால் விமானத்தில் எழுந்தருளிச் சென்றார்.

அப்போது, சிந்தாந்த மூர்த்திக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏராளமான மாங்கனிகளை வீசி சுவாமியை பக்தியுடன் வழிபட்டனர். இந்த மாங்கனிகளை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணமாகும் என்பது ஐதீகம் என்பதால் பக்தர்கள் ஏராளமானோர் அந்த மாங்கனிகளை வாங்கிச் சென்றனர். பொதுமக்கள் தங்களின் வீடுகளின் மாடி, பால்கனியில் இருந்து மாங்கனிகளை பிச்சாடனரை நோக்கி வீசினர். கீழே நிற்கும் பக்தர்கள் அந்த மங்கனிகளை பிடித்து பிரசாதமாக உட்கொள்வதற்காக போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+