Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 2,500.. புதுச்சேரி பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கப்படும் என்று முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். அதேபோல, உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயும், பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் வாரத்தில் 3 நாள்கள் வழங்கப்படும் முட்டை, இனி வாரம் முழுவதும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப் பேரவைக் கூட்டம் துணை நிலை ஆளுநரின் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, புதுச்சேரி அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை சட்டப் பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி இன்று காலை தாக்கல் செய்தார். ரூ.13,600 கோடி மதிப்பில் புதுவையின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி உரையாற்றி வருகிறார்.

Puducherry Budget CM Rangaswamy

இந்த பட்ஜெட்டில் விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.2,000 வழங்கப்படும். ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன், இரண்டு கிலோ இலவச கோதுமை வழங்கப்படும். அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும். பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் வாரம் 3 நாள் வழங்கப்படும் முட்டை, இனி வாரத்தில் அனைத்து நாட்களும் வழங்கப்படும்-முதலமைச்சர் ரங்கசாமி.

6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று இளநிலை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1000, மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். முதியோர் உதவி பெறும் மீனவ பெண்கள் உயிரிழப்பு ஈமச்சடங்கு தொகை ரூ15 ஆயிரத்தில் இருந்து ரூ20 ஆயிரமாக உயர்வு.

புதுச்சேரி ஈசிஆர் பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்படும். புதுச்சேரி மத்திய சிறைச்சாலை முழுமையாக கணினி மயமாக்கப்படும். எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயத்தப்படும்.

மீனவ சமுதாய ஈமச் சடங்குகளுக்கான நிதி ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும். மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+