Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛என் மனைவி கர்ப்பமா இருக்கா’.. அவக்கிட்ட சொல்லாதீங்க.. உயிர்போகும் முன் ராணுவ வீரர் கூறிய வார்த்தை

Subscribe to Oneindia Tamil

காரைக்கால்: என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். அவக்கிட்டா சொல்லாதீங்க எனக்கூறி காரைக்கால் ராணுவ வீரர் ரத்த வாந்தி எடுத்து மறைந்த சம்பவம் கண்களை கலங்க வைக்கிறது.

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அடுத்த போலகம் கிராமம் வீரன்குடி தெருவை சேர்ந்தவர் பிரேம் குமார். இவருக்கு வயது 32. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய திபெத் எல்லைக் காவல்படையின் 47வது படை பிரிவில் காவலராக சேர்ந்தார்.

My wife is pregnant so dont tell to her Karaikal army man Prem Kumar said before his died

இவருக்கு செவ்வந்தி என்ற மனைவியும், கீர்த்தி என்ற 5 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். செவ்வந்தி தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் தான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் வந்த பிரேம்குமார் வந்தபோது மனைவி, மகனை வீட்டில் விட்டுவிட்டு சென்றார்.

மனைவி கர்ப்பிணியாக இருப்பதால் அவர் வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் இந்தியா சீனா எல்லையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 30ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா, சீனா எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் இறந்தார். அதாவது திடீரென்று மயக்கமடைந்த பிரேம் குமார் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் கூட அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து வீரர் பிரேம்குமார் உடல் விமானத்தில் நேற்று முன்தினம் சென்னை கொண்டு வரப்பட்டது. நேற்று இரவு திருப்பட்டினம் பகுதியில் உள்ள பிரேம்குமார் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பிறகு இன்று அவரது உடல் 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

My wife is pregnant so dont tell to her Karaikal army man Prem Kumar said before his died

இந்நிலையில் தான் பிரேம் குமார் இறப்பதற்கு முன்பு மனைவி பற்றி கூறிய வார்த்தைகள் கலங்க வைக்கின்றனர். இதுபற்றி அவரது மனைவி செவ்வந்தி கூறியதாவது: வழக்கமாக தினமும் எனது கணவர் என்னிடம் செல்போனில் பேசுவார். அப்படித்தான் அன்று இரவு 8 மணிக்கு (அதாவது கடந்த மாதம் 30ம் தேதி) போன் செய்தார். அதன்பிறகு இரவு 9.40க்கு போன் செய்தார். சாப்டியா, தம்பி (அதாவது மகன்) சாப்பிட்டானா? என கேட்டார். வீடியோ காலும் பேசினார்.

மேலும் இரவு 12 மணிக்கு பணியில் இருந்து இறங்கிவிடுவேன் எனக்கூறினார். ஆனால் அவர் இரவு 12 மணிக்கு இறந்துள்ளார். அவர் இறந்தது எனக்கு தெரியாது. பட்டணம் ஸ்டேஷனில் இருந்து எனது அம்மாவுக்கு போன் வந்தது. ரமணியா நீங்கள். உங்கள் மகள் பெயர் செவ்வந்தியா? உங்களின் மருமகன் பிரேம் குமாரா? என கேட்டுவிட்டு சம்பவத்தை கூறியுள்ளனர்.

முன்னதாக என் கணவருக்கு அவர் சாகப்போவது தெரிந்துள்ளது. இதனால் ‛என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். அவக்கிட்ட மட்டும் சொல்லாதீங்க’ எனக்கூறியுள்ளார். இதனால் ஸ்டேஷனில் இருந்து பேசியவர்கள் என்னிடம் சொல்ல வேண்டாம். வேறு யாரிடமாவது சொல்லுங்கள் என தாயிடம் கூறியுள்ளனர்.

என் கணவர் அங்கு திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். 2 முறை ரத்த வாந்தி எடுத்துள்ளார். என் புருஷன் என்னை அப்படி வைச்சிப்பார். நாங்க ஜம்முவில் 47 வது பட்டாலியனில் தான் இருந்தோம். கர்ப்பமாக இருந்ததால் தான் என்னை இங்கு விட்டுவிட்டு சென்றார். இல்லைனா நான் என் செல்லத்தை பிரிந்து இருக்கமாட்டேன். என் தங்கத்தை பிரிந்து வந்திருக்க மாட்டேன். இங்கிருந்து 5 மாதத்தில் மீண்டும் அங்கு போய்விடுவேன் என்று தான் நான் நினைத்தேன்.

செவ்வாய்க்கிழமை ( ஏப்ரல் 30ம் தேதி) காலை 3.40 மணிக்கு பட்டணம் ஸ்டேஷனில் இருந்து செய்தி வந்துவிட்டது. என் சொந்தம் பந்தம் எல்லாம் வந்தார்கள். என் அக்காள், தங்கை, அக்காளின் கணவர் மாமா என அனைவரும் வந்துவிட்டனர். அவர்களுக்கு நியூஸ் தெரிந்து இருக்கு. ஆனால் என்கிட்ட சொல்லவே இல்லை. என் கணவர் நன்றாக இருப்பதாக மாமா கூறினார்.

என் கணவர் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு 5வது பட்டாலியனில் இருந்தார். நான் செல்போனை எடுத்து பார்த்தபோது அந்த பட்டாலியனில் இருக்கும் அண்ணன்கள் ஸ்டேட்டஸ் வைத்திருந்தனர். அப்போது தான் எனக்கு தெரியும். என் கணவர் நாட்டுக்காக உயிரை விட்டு இருக்கிறார். எனக்கு சந்தோஷம் தான். எனக்கு ஒரு பையன் இருக்கிறார். எனக்கு ஒரு வேலை மட்டும் கொடுத்தால் போதும்.. வேறு எதுவும் வேண்டாம்’’ என கண்ணீருடன் கூறி கலங்க வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+