மாணவர்களின் மனதை பாதிக்கும் நீட் வேண்டாம் : மோடிக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதல்வர்
நீட் தேர்வினால் தமிழகத்தில் 7க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். மனதளவில் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி: நீட் தேர்வினால் தமிழகத்தில் 7க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதால் 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முன்பு இருந்ததை போல் தொடர வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கடினம் என்பதால் ஜே.இ.இ தேர்வை தள்ளி வைக்க வேண்டும் எனவும் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் நாராயணசாமி.
ஒரு பக்கம் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மறுபக்கம் பல மாநிலங்களில் வெள்ளம் பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் நீட் தேர்வினையும், ஜேஇஇ எனப்படும் பொது நுழைவுத்தேர்வுகளை நடத்தியே தீருவது என மத்திய அரசும் தேசிய தகுதித்தேர்வு முகமையும் உறுதியாக உள்ளன.

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி காணொளி காட்சி மூலம் புதன்கிழமை மாலை ஆலோசனை நடத்தினார்.
நீட் தேர்வை ரத்து செய்யவும் ஜேஇஇ தேர்வை ஒத்தி வைக்கவும் வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் எதிர்கட்சிகள் சார்பில் வழக்குத் தொடர வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார். எதிர்கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தினால் மத்திய அரசு நிச்சயம் இறங்கி வரும் எனவும் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் நாராயணசாமி எழுதியுள்ள கடிதத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கடினம் என்பதால் ஜேஇஇ தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு சிபிஎஸ்இ கல்வி முறையின் அடிப்படையில் நடக்கிறது. பல மாநிலங்களில் மாநில அரசு கல்விமுறை உள்ளது. நீட் தேர்வினால் தமிழகத்தில் 7க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். மாணவர்கள் மனதளவில் நீட் தேர்வால் பாதிக்கப்படுகின்றனர். 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முன்பு இருந்ததை போல் தொடர வேண்டும் என்றும் நாராயணசாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications