Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலியோ முகாம்.. நாராயணசாமி தொடங்கி வைத்தார்.. 91,000 குழந்தைகளுக்கு டிராப்ஸ்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் 452 மையங்களில் 91 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் - புதுச்சேரி எல்லைப் பகுதிகள், சுற்றுலா தளங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

polio drops camp held in puducherry

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட 91 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

போலியோ சொட்டு மருந்து முகாமினை லெனின் வீதியில் உள்ள மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

polio drops camp held in puducherry

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்கள் மற்றும் மாகி, ஏனாம் பிராந்தியங்களில் மொத்தம் 452 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. முகாமில் 2000 சுகாதார ஊழியர்கள் சொட்டு மருந்து போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

polio drops camp held in puducherry


மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் சுற்றுலா தலங்கலான கடற்கரைசாலை, மணக்குள விநாயகர் கோவில், தாவரவியல் பூங்கா, ஊசுட்டேரி, சுண்ணாம்பார் படகு குழாம் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புதுச்சேரி - தமிழகம் எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னிகோயில், திருக்கனுார், குருமாம்பேட் ஆகிய 6 இடங்களில் நடமாடும் போலியோ ஊர்தி மூலமும் போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+