போலியோ முகாம்.. நாராயணசாமி தொடங்கி வைத்தார்.. 91,000 குழந்தைகளுக்கு டிராப்ஸ்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் 452 மையங்களில் 91 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் - புதுச்சேரி எல்லைப் பகுதிகள், சுற்றுலா தளங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட 91 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
போலியோ சொட்டு மருந்து முகாமினை லெனின் வீதியில் உள்ள மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்கள் மற்றும் மாகி, ஏனாம் பிராந்தியங்களில் மொத்தம் 452 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. முகாமில் 2000 சுகாதார ஊழியர்கள் சொட்டு மருந்து போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் சுற்றுலா தலங்கலான கடற்கரைசாலை, மணக்குள விநாயகர் கோவில், தாவரவியல் பூங்கா, ஊசுட்டேரி, சுண்ணாம்பார் படகு குழாம் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புதுச்சேரி - தமிழகம் எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னிகோயில், திருக்கனுார், குருமாம்பேட் ஆகிய 6 இடங்களில் நடமாடும் போலியோ ஊர்தி மூலமும் போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடைபெற்று வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications