இரவில் ஏற்பட்ட மின்தடை.. ஒன்றரை மணி நேரம் இருளில் மூழ்கிய புதுச்சேரி.. பொதுமக்கள் அவதி
புதுச்சேரி: புதுச்சேரி நகரில் இரவு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் புதுச்சேரி நகரமே இருளில் மூழ்கியது.
புதுச்சேரி மாநிலத்திற்கு தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திலிருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. நெய்வேலியில் இருந்து வரும் மின்சாரம், புதுச்சேரியின் வில்லியனூர் துணை மின்நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து நகரப்பகுதியில் உள்ள மரப்பாலம் துணை மின் நிலையத்திற்கு மாற்றபட்டு, புதுச்சேரி முழுவதும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் வில்லியனூர் துணை மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக புதுச்சேரி நகரம் முழுவதும் மற்றும் கிராமப்புறங்களில் ஒருசில இடங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் புதுச்சேரி நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதனையடுத்து மின்துறை ஊழியர்கள் உடனடியாக பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு, சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. அதாவது இரவு 8.30 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு 10.00 மணிக்கு வழங்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தலால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த மின்தடையால் மின்விசிறி, ஏசி உள்ளிட்ட எந்தவித மின் சாதனங்களும் ஓடாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் புதுச்சேரியில் பகல் நேரத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இரவில் ஏற்பட்ட மின்தடையால் மக்கள் புழுக்கத்தில் அவதிப்பட்டனர்.
இரவில் ஏற்பட்ட மின்தடை.. ஒன்றரை மணி நேரம் இருளில் மூழ்கிய #புதுச்சேரி நகரம்.. பொதுமக்கள் அவதி.. #Puducherry pic.twitter.com/vhB5xmxxss
— Oneindia Tamil (@thatsTamil) April 25, 2020
இதனிடையே ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுபானக் கடைகள் மற்றும் மதுபான குடோன்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இரவில் திடீரென ஏற்பட்ட மின்தடையை பயன்படுத்தி சமூக விரோதிகள் மதுபானக்கடைகளை உடைத்து மதுபானங்களை திருட வாய்ப்பிருந்ததால், ஒருசில மதுபான கடையின் வெளியே மின்சாரம் வரும்வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications