தெய்வ பக்தி நிறைந்தவர்களின் நிலம் புதுச்சேரி.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம்!
புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைகழகத்தின் 27 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
பெண்கள் அதிகளவில் தங்கப்பதக்கம் மற்றும் பட்டம் பெற்றுள்ளது எதிர்கால இந்தியாவை பிரதிபலிக்கும் செயல் என ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புதுவை மத்திய பல்கலைகழகத்தின் 27 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் கோகுல்கிருஷ்ணன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதலாவதாக பல்கலைகழக துணைவேந்தர் குர்மீத் சிங் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு, பட்டங்களையும், தங்கப் பதக்கங்களை வழங்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், புதுவை பல்கலைகழகத்தின் 27 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், புதுச்சேரி மாநிலம் கவிஞர்கள், தேசபக்தர்கள், தெய்வ பக்தி நிறைந்தவர்களின் நிலமாக உள்ளது. புதுச்சேரி உலகம் முழுவதும் அறியப்பட்டதற்கு காரணம் அரவிந்தரும், மகாகவி பாரதியும்தான் என புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தூய்மை இந்தியா இயக்கத்தை முழுமையாக செயல்படுத்திய முதலாவது பல்கலைக்கழகமாக புதுச்சேரி பல்கலைக்கழகம் விளங்குகிறது. பட்டமளிப்பு விழாவில் பெண்கள் அதிகளவில் தங்கப்பதக்கம் மற்றும் பட்டம் பெற்றுள்ளது எதிர்கால இந்தியாவை பிரதிபலிக்கும் செயல் என்று பாராட்டினார். பட்டமளிப்பு விழாவு நிறைவு பெற்றதும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் மாளிகைக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார்.
இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை காலை புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்காலுக்கு செல்கிறார். அங்கு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் அவர், சனிபகவான் சன்னதியில் சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி புதுச்சேரியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முன்னதாக புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக இதழியல் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்ற மாணவி ரபியா, தங்கப்பதக்கத்தை திரும்ப அளித்தார். அரங்கத்திற்குள் அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பதக்கத்தை திரும்ப அளித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications