இந்தியாவில் முதல்முறை.. மொத்தமாக மரத்தடியில் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடர்.. புதுச்சேரியில் செம!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள மரத்தடியில் இந்த சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது.

நாடு முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் பொது மக்கள் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் அரசியல்வாதிகளும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதிலும் தமிழகத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் வரிசையாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழக எம்எல்ஏக்கள்

தமிழக எம்எல்ஏக்கள்

தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி, பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ .சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் (குணமாகிவிட்டார்) ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. முன்னதாக திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசன், கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா ஏற்பட்டது. அதிமுக எம்எல்ஏ நிலோபர்,

புதுச்சேரி எப்படி

புதுச்சேரி எப்படி

இன்னொரு பக்கம் புதுச்சேரியில் எதிர்க்கட்சி எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வருகிறார். லேசான அறிகுறியுடன் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி எம்எல்ஏக்களுக்கு இதனால் கொரோனா சோதனை செய்ய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

கூட்டம்

கூட்டம்

இந்த நிலையில் தற்போது புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள மரத்தடியில் இந்த சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது. புதுச்சேரியில் கடந்த 20ம் தேதி சட்டசபை கூட்டம் தொடங்கியது. அங்கு எம்எல்ஏக்கள் எல்லோரும் கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் இடையே கொரோனா பரவி இருக்குமோ என்று அச்சம் எழுந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த கூட்டம் வெளியே நடக்கிறது.

Recommended Video

    Oxford vaccine மனித உடலில் இப்படி தான் வேலை செய்யும்
    வெளியே நடக்கிறது

    வெளியே நடக்கிறது

    அங்கு இருக்கும் மரத்தடியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல்முறை இப்படி மரத்தடியில் சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது. அங்கு இதற்காக மேஜைக்கள் போடப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் அங்கு கூட்டம் நடக்கும். கூட்டத்திற்கு முன் எம்எல்ஏக்கள் எல்லோருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+