கொரோனா வைரஸ் எதிரொலி.. புதுச்சேரி கடற்கரை சாலை மூடல்.. உச்சகட்ட அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: கொரோனா வைரஸ் எதிரொலியாக புதுச்சேரி கடற்கரை சாலை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

Puducherry beach closed regarding coronavirus precaution activities

மேலும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு வெளிமாநிலத்தவர் தீவிர பரிசோதனைக்கு பிறகே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Puducherry beach closed regarding coronavirus precaution activities

குறிப்பாக சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். ஆனால் சுற்றுலாத் தலங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் இன்றி புதுச்சேரி நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது.

எனினும் புதுச்சேரியின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கிவரும் கடற்கரை சாலை மட்டும் நேற்று வரை மூடப்படாமல் இருந்தது. ஆனால் கொரோனாவின் தீவிரம் வேகமாக உள்ளதால் புதுச்சேரி அரசு கடற்கரை சாலையையும், இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Puducherry beach closed regarding coronavirus precaution activities

மேலும் பிரதமர் மோடி நாளைய தினம் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தியுள்ளதால், புதுச்சேரி முழுவதும் நாளை கடைகள், உணவகங்கள், மதுபானக்கடைகள் உள்ளிட்டவை முடப்பட்டிருக்கும் என வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நாளை பேருந்து சேவையையும் புதுச்சேரி அரசு ரத்து செய்துள்ளது.

அதேபோல் கொரோனா நோய் தொடர்பாக பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை முதல்வருக்கு வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்குமாறு முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் பொதுமக்கள் உடல் நலன் கருதி, தங்களின் குறைகள், கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவிக்க நேரில் வராமல், 9345375069 என்கிற தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலமாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது இந்த ஏற்பாடு வரும் 31 ம் தேதி வரையில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+