கேஜ்ரிவால் பாணியில் விவசாய சட்ட நகல்களை கிழித்து எறிந்த புதுவை முதல்வர் நாராயணசாமி!
புதுச்சேரி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பாணியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களின் நகல்களை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பாஜக அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம்- மு.க.ஸ்டாலின் உட்பட 2,000 பேர் மீது வழக்கு
புதுச்சேரி அண்ணா சதுக்கம் அருகே இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம், எம்.பி. வைத்திலிங்கம், விழுப்புரம் மாவட்ட எம்.பி. ரவிக்குமார் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை மற்றும் கூட்டணி கட்சி உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
இன்று மாலையில் முதல்வர் நாராயணசாமி நிறைவுரையாற்றிய போது. மத்திய பாஜக அரசின் விவசாய சட்ட நகல்களை கிழித்தெறிந்தார். பின்னர் நாராயணசாமி உட்பட கட்சி நிர்வாகிகள் அனைவரும் குளிர்பானம் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.