நியமன உறுப்பினர்களை வாக்களிக்க அனுமதித்தது தவறு.. நாங்கள்தான் மெஜாரிட்டி- அமைச்சர் கந்தசாமி
புதுச்சேரி: நியமன உறுப்பினர்களை வாக்களிக்க அனுமதித்தது தவறு என்று புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
துணை நிலை ஆளுநர் உத்தரவையடுத்து, புதுச்சேரி சட்டசபையில் நாராயணசாமி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது. அதேநேரம், தங்களுக்கு போதிய அளவுக்கு எம்எல்ஏக்கள் பலம் இல்லை என்பது ஆளும் தரப்பு உணர்ந்து இருக்கிறது.
இதை, அமைச்சர் கந்தசாமி இன்று காலை அளித்த பேட்டி உறுதி செய்வதாக இருக்கிறது.

தமிழிசைக்கு வாழ்த்து
கந்தசாமி கூறியதாவது: தமிழிசை சௌந்தர்ராஜன் துணை நிலை ஆளுநராக தமிழில் பதவி பிரமாணம் செய்து கொண்டார். இதுவரை புதுச்சேரி வரலாற்றில் அனைவரும் ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் செய்தனர். தமிழிசை தமிழ் மொழியில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாங்கள்தான் பெரும்பான்மை
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 12 பேர் உள்ளோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சியினர் 11 பேர் இருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் நாங்கள்தான் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டுள்ளோம். ஆனால், நியமன உறுப்பினர்கள் மூன்றுபேரை வாக்களிக்க அனுமதி அளித்துள்ளனர்.

ராஜினாமா
ஒருவேளை நியமன உறுப்பினர்களை வாக்களிக்க அனுமதித்தால், சட்டசபையை கூட்டி பாஜக அரசு என்னவெல்லாம் இந்த ஆட்சிக்கு எதிராக செய்ததோ அதைப் பற்றி முதல்வர் நாராயணசாமி உரையாற்றுவார். அதன்பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு முன்பாகவே ராஜினாமா சமர்ப்பித்து விடுவோம். நியமன உறுப்பினர்களை வாக்களிக்க அனுமதித்தது ஜனநாயக விரோதம் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வோம். இவ்வாறு அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திட்டம்
இரு தினங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு கருத்தை ரங்கசாமி கூறினார். ஆனால் நாராயணசாமி அவர் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று தெரிவித்தார். ஆனால் இன்றுள்ள நிலைமையில், அமைச்சர் கூறுவதுதான் நடக்கப் போகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

நாராயணசாமி முயற்சி
கடைசி நேரத்தில் நாராயணசாமி உருக்கமாக பேசுவதன் மூலமாக, மக்கள் மத்தியில் அனுதாபம் ஏற்படுத்த முடியுமா என்று முயற்சி செய்து பார்ப்பார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆனால் இது காலம் கடந்த முயற்சி என்று கூறக்கூடிய அரசியல் விமர்சகர்களும் இருக்கிறார்கள்.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications