ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.. புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும், மக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி வெங்கட்டா நகர் பகுதியில் உள்ள தமிழ் சங்க வளாகத்தில் புதிதாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலையை தமிழ் சங்க தலைவர் முத்து தலைமையில், முதல்வர் நாராயணசாமி நாராயணசாமி திறந்து வைத்தார்.

சிலை திறப்பு விழாவில் சபாநாயகர் சிவகொழுந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சிலை திறப்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசாக இருந்தாலும், மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும், மாநிலத்தில் ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி இல்லாமல் திட்டத்தை நிறைவேற்ற முடியாது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு புறக்கணித்து, மாநில அரசுகளை உதாசீனம் செய்துள்ளது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஏற்கனவே இந்த திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டம் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன். புதுச்சேரி மாநிலத்தில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications