அடித்து ஆவேசமாக மல்லுக்கட்டிய பெண்கள்... கமல் கட்சி அலுவலக திறப்பு விழாவில் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சி திறப்பு விழாவில் இரண்டு பெண்கள் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தை இன்று நடிகரும் அக்கட்சியின் நிறுவனருமான கமல் ஹாசன் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஏராளமான கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அப்போது செய்தியாளர்களிடம் கமல் பேசுகையில், "நேற்றைய விழாவில் மக்களை பார்க்கும் போது, அவர்கள் அமர்ந்து இருந்த தோரணையும், பேசுவதை கேட்டுக்கொண்டிருந்ததும், அதற்கு அவர்களுடைய பிரதிபலிப்பும், வெகு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருந்தது. கடைசி வரை அவர்கள் என்னுடைய பேச்சுக்களை உண்ணிப்பாக கவனித்ததை ஒரு கலைஞனாக மேடை பலம் கண்டவர்கள் என என்னால் உணர முடிந்தது.
விடாமல் துரத்தும் வருமான வரித் துறை.. துரைமுருகன் வீட்டில் மீண்டும் சோதனையால் பரபரப்பு
அவர்கள் நேர்மையை ரசிக்கிறார்கள். ரசிக்க தொடங்கிவிட்டார்கள். அதற்கான சாயல்கள் ஓட்டுச்சாவடியில் தெரியும். புதுவையை புதிய மாநிலமாக மாற்றிக்காட்டுவதற்கு எனது கட்சிலேயே பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதை செய்து காட்டுவார்கள் என நம்புகிறேன்" இவ்வாறு கூறினார்.
இதனிடையே விழாவில் ஏராளமான கட்சி தொண்டர்கள், பெண்கள், செய்தியாளர்கள் அலுவலகத்துக்குள் இருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில், இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.