உச்சாணிக்கு ஏறிய கரண்ட் பில்..பாஜக, ரங்கசாமி செவி சாய்க்கல.. புதுச்சேரியில் அதிமுக இன்று உண்ணாவிரதம்
புதுச்சேரி: புதுச்சேரியில் அதிமுக இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறது.. மின்சார கட்டணம் உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த போராட்டத்தை இன்று காலை 10 மணிக்கு முன்னெடுக்கிறது.
புதுச்சேரியில் வருடா வருடம் மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது .அதனடிப்படையில் 2024-25ம் ஆண்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்த மாநில மின் துறை முடிவு செய்திருந்தது. எனவே, இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், புதுச்சேரி மின்துறை மற்றும் மின் திறல் குழுமம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

அத்துடன், மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் பொதுமக்களிடமும் கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தியிருந்தது. அந்த கூட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுமக்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மின் கட்டண உயர்வு: இதற்கு நடுவில், லோக்சபா தேர்தல் நடந்ததால், மின் கட்டண உயர்வு தற்காலிகமாக புதுச்சேரியில் நிறுத்தி வைக்கப்பட்டது.. இதற்கு பிறகு சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. அதாவது, ஒன்றரை மடங்கு கட்டணத்தை அதிகப்படுத்தியிருக்கிறது புதுச்சேரி அரசு.. இது பொதுமக்கள் தரப்பில் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.. எதிர்க்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
அப்படியானால், மின் கட்டண உயர்வுக்காக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட எந்த விவரமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லையா? லோக்சபா தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு காரணமே, இந்த கரண்ட் பில் உயர்வுதானே? பயன்படுத்திய மின் யூனிட்டுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்காமல் கூடுதலாக பலவித கட்டணங்களை மக்களுக்குத் தெரியாமல் வசூல் செய்வது பெருத்த அதிருப்தியை உண்டுபண்ணி வருகிறது.
அதிருப்திகள்: தேர்தலில் மக்கள் தந்த பாடத்தை உணராமல், மீண்டும் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதை ஏற்க முடியாது" என்று அரசியல் கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
அந்தவகையில், புதுச்சேரி அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று அதாவது 16ம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிதர போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது... அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ள மின்கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை அதிமுக முன்னெடுத்துள்ளது.
இன்று உண்ணாவிரதம்: இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.. இந்த போராட்டத்துக்கு விசிகவுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறது புதுச்சேரி அதிமுக.. அந்தவகையில், இன்று நடக்க போகும் உண்ணாவிரதத்தை, புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் - பாஜக அரசானது உற்றுகவனித்து வருகிறது.
-
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்












Click it and Unblock the Notifications