புதுச்சேரி.. கிரண்பேடிக்கு எதிராக திரண்ட மீனவர்கள்.. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உட்பட 500 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்காததை கண்டித்து ஆளுநர் மாளிகை மற்றும் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட மீனவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் 18 மீனவ கிராமங்களை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 50 ஆயிரம் நபர்கள் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். இதனிடையே மீன்பிடி தடைக்காலம் முடிந்த பின்னர் கடந்த 1 ஆம் தேதி முதல் மீண்டும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆனால் மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீன்பிடி தடைக்கால நிவாரணம் இதுவரை வழங்கப்படாத நிலையில், தடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கக்கோரி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் வம்பாகீரபாளையம் பகுதியில் இருந்து ஆளுநர் மாளிகை மற்றும் சட்டசபை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

அப்போது போலீசார் பாரதி பூங்கா அருகே தடுப்புகளை அமைத்து முற்றுகையிட வந்தவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனால் ஊர்வலம் வந்தவர்கள் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராகவும், புதுச்சேரி அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு தடைகளை தாண்ட முற்பட்டபோது, மீனவர்களுக்கும் போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட மீனவர்களை போலீசார் கைது செய்தார்கள். இதனால் ஆளுநர் மாளிகை மற்றும் சட்டப்பேரவை அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே ஒரு வார காலத்திற்குள் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை அரசு வழங்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும், பென்ஷன் வாங்கும் மீனவர்களுக்கு வழங்கப்படும் தடைக்கால நிவாரணத்தை ரத்து செய்யக்கூடாது என முற்றுகையில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications