புதுச்சேரி சிறுமி படுகொலை.. நெஞ்சைப் பதற வைக்கிறது.. பெருந்துயரம்.. நடிகர் விஜய் ஆறுதல்
புதுச்சேரி: சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் இதை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. சிறுமி கொலை வழக்கில் நீதி வழங்கக் கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கடற்கரைச் சாலை காந்தி சிலை முன்பு இன்று கூடினர். அவர்கள், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும். நீதி வேண்டும். குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், கடும் கண்டனத்தை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று விஜய் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications