Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மளிகை கடைக்காரரையும் "சாய்த்த" வனிதா.. புதரில் டார்ச் வெளிச்சம்.. அதென்ன "6 கண்கள்".. கூகுள் பே வேற

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: கல்லூரி மாணவி வனிதாவை காணோமாம்.. போலீசார் அவரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம்?

புதுச்சேரி வில்லியனூர் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன்.. 50 வயதாகிறது.. இவர் சொந்தமாக மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.. இவரது வீட்டின் மாடியிலேயே, ரூம் ஒன்று காலியாக இருந்திருக்கிறது.

Puducherry Incident and Why did College student Vanitha take this Sudden decision

இளம்பெண்: இந்நிலையில், கடந்த 12-ம் தேதி, இவரது கடைக்கு வனிதா என்ற 19 வயது பெண் ஒருவர் வந்துள்ளார். தனக்கு ஒரு வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார்.

புதுச்சேரியில் ஒரு காலேஜில் 2ம்வருடம் தான் படித்து வருவதாகவும், தனக்கு அப்பா, அம்மா யாருமே இல்லை என்பதால், வில்லியனூர் கணவாபேட்டையில் சொந்தக்காரர் வீட்டில் தங்கியிருப்பதாகவும், அவர்களுடன் இப்போது சண்டை வந்துவிட்டதால், தனியாக வாடகைக்கு வீடு வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அத்துடன், கருணாகரனின் வீட்டு மேல் பகுதியில் உள்ள ரூமை, வாடகைக்கு தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்..

கருணாகரன்: இதனால் கருணாகரன், 2 நாள் கழித்து வந்து சந்திக்கும்படி சொல்லவும், அவரது செல்போன் நம்பரை கேட்டு வாங்கிக்கொண்டு சென்றார் வனிதா.. ஆனால், நம்பர் வாங்கிக்கொண்டு போனதில் இருந்தே, கருணாகரனுக்கு போனை போட்டு பேசி வந்துள்ளார் வனிதா.. பிறகு, வில்லியனூரில் ஒரு ஜூஸ் கடை இருப்பதாகவும், அங்கே தன்னுடன் வந்து ஜூஸ் குடிக்க வருமாறும் அழைத்துள்ளார். உடனே கருணாகரனும் பைக்கை எடுத்து கொண்டு வந்து, வனிதாவுடன் சேர்ந்து ஜூஸ் குடித்துள்ளார்.

2 பேரும் இப்படியே, அடிக்கடி சந்தித்து பேசி வந்திருக்கிறார்கள். சம்பவத்தன்று இரவு, கருணாகரனுக்கு போன் செய்து, "எனக்கு மனசு சரியில்லை, நீங்கள் ரொம்ப கூலாக பேசறீங்க.. நாம ஒருநாள் தனியாக வெளியே செல்லலாம்" என்று அழைத்துள்ளார்.

காட்டுப்பகுதி: வனிதாவின் இந்த பேச்சில் கவிழ்ந்த கருணாகரன், அன்னைக்கு நைட்டே, பைக்கில் வனிதாவை ஏற்றிக்கொண்டு வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் உள்ள பம்ப் ஹவுஸ் அருகே உள்ள புதார் பகுதிக்கு சென்றுள்ளார்.. அங்கே 2 பேரும் உல்லாசமாக இருக்க முயன்றுள்ளனர். அப்போது திடீரென புதருக்குள்ளிருந்து 3 பேர், டார்ச் லைட் அடித்து கொண்டே வெளியே வந்திருக்கிறார்கள்.

வனிதாவை அங்கிருந்து கிளம்ப சொல்லிவிட்டு, ஆடைகளை கழட்ட சொல்லி கருணாகரனை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை வைத்துக்கொண்டு, கருணாகரனிடம் 2 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். இதனால் பயந்துபோன கருணாகரன், கையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை அவர்களிடம் தந்திருக்கிறார்..

பிறகு தன்னுடைய நண்பரிடம் செல்போனில் பேசி, ரூ.75 ஆயிரம் பணத்தை கூகுள்பே செய்ய சொல்லி, அதை மர்ம கும்பலிடம் தந்துவிட்டு, அங்கிருந்து நேராக வில்லியனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் தந்துள்ளார்.

கூகுள்பே: இதையடுத்து போலீசார் கூகுள்பே அனுப்பப்பட்ட நம்பரை வைத்து விசாரணையை துவக்கினர். அந்த மர்ம நபர்கள் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த பப்லு என்கிற பிரகாஷ், (21 வயது) ராமு (22 வயது) என்பது தெரியவந்தது. இந்த 2 பேருமே இப்போது கைதாகி கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள். ஆனால், வனிதாவை காணோமாம்.. தலைமறைவாக உள்ளதால் அவரையும், அருண் என்பவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

இதெல்லாமே வனிதாவின் ப்ளான்தானாம்.. கருணாகரனிடம் நிறைய பணம் இருப்பதை தெரிந்துகொண்டு, அதை அபகரிப்பதற்காக நண்பர்கள் அனைவருமே சேர்ந்து போட்ட திட்டமாம். வனிதாவிடம் ஏமாந்துபோனதால், இடிந்து போய் கிடக்கிறார் 50 வயது கருணாகரன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+