ஸ்டாம்ப் சைஸ் நரகம்.. 24 மணி நேர போதை.. வேற லெவலுக்கு மாறிய புதுவை கும்பல்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப் விற்பனை செய்துவந்த பட்டதாரி இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனிடையே புதுச்சேரியில் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறித்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் ஸ்டாம்ப் வடிவலான புதிய வகை போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த அருண்(30) என்பவரை லாஸ்பேட்டை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அருண் பட்டபடிப்பு படித்துவிட்டு, மருந்து பொருட்கள் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருவதும், பெங்களூரிலிருந்து ஸ்டாம்ப் வடிவிலான போதைப் பொருட்களை வாங்கிவந்து புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனை செய்துவந்ததை ஒப்புகொண்டார்.

இதனையடுத்து அருணை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள 24 போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு ஸ்டாம்பை பெங்களூருவில் ரூபாய் 500 க்கு வாங்கிவந்து புதுச்சேரியில் 2 ஆயிரம் வரை அருண் விற்பனை செய்துள்ளார்.

இந்த போதைப்பொருளை பயன்படுத்துபவர்களுக்கு 24 மணி நேரத்திற்கு போதை இருக்குமென கூறப்படுகிறது. புதுச்சேரியில் ஸ்டாம்ப் வடிவிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications