புதுச்சேரி வளர்ச்சி கிரண்பேடிக்கு பிடிக்கவில்லை.. அவருக்கு கெட்டெண்ணம்.. நாராயணசாமி தாக்கு!
புதுச்சேரி: புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து இடைஞ்சல் செய்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டு, மூன்றில் ஒரு பங்கு அரசு ஊழியர்கள் பணிக்கு வருகின்றனர். எந்த புதிய தொழிற்சாலையும் திறக்கப்படவில்லை. விவசாய வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

கட்டிடத் தொழிலாளர்களின் பணிக்கு தடையில்லை உள்ளிட்ட மத்திய அரசின் உத்தரவுகளை நாம் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். புதுச்சேரியில் இலவச அரிசி வழங்குவதில் மிகப்பெரிய குழப்பம் இருந்து வருகிறது. அரிசி எடுத்து வந்து சுமார் 1 மாதமாகியும் சுமார் 40 சதவீதம் மக்களுக்குக் கூட அரிசி வழங்கப்படவில்லை.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை கொடுத்து, ரேஷன் கடை மூலமாக அரிசியை விநியோகிக்கலாம் என நாங்கள் கூறியதை கேட்காத ஆளுநர் கிரண்பேடி, தேவையில்லாமல் தலையிட்டு, அரிசியை பேருந்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உதவாத கருத்தைக் கூறி, மக்களுக்கு உரிய காலத்தில் அரிசி சென்று சேராத நிலையை உருவாக்கியுள்ளார்.
கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படக் கூடாது என்பதற்காக தொடர்ந்து இடைஞ்சலை செய்து வருகிறார். புதுச்சேரி மாநில மக்கள் வளரக்கூடாது என்பது அவருடைய எண்ணம். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரி மாநில மக்களுக்காக, மத்திய அரசை அணுகி, மாநில நிதியைப் பெறுவதற்கு எந்த உதவியும் செய்யவில்லை.
ஆனால் மாநில அரசு நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் குறியாக இருக்கிறார். புதுச்சேரி மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்று சேரக்கூடாது என்பதற்காக அவர் அரசின் அனைத்து முடிவுகளிலும் தலையிட்டு, அதனை காலதாமதப்படுத்தி, மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்று சேராத அளவுக்கு முட்டுகட்டை போட்டு வருகிறார்.
இது தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சருக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளேன். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. புதுச்சேரியில் பொதுமக்களை பலமுறை அறிவுறுத்தியும் கடைகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2 நாட்களில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை வரை பார்ப்போம். மக்கள் தொடர்ந்து தெருவில் நடமாடினால் 3 நாட்களுக்கு ஒரு முறை கடைகள் திறக்கப்படும் என்ற கட்டுப்பாட்டை அரசு கொண்டு வரும் என நாராயணசாமி தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications