புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்தி வந்த போராட்டம் ஒத்திவைப்பு
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி கடந்த 3 நாட்களாக விடிய விடிய நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி- முதல்வர் நாராயணசாமி இடையே உச்சகட்ட மோதல் நிலவுகிறது. யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என்பது முதல்வர் நாராயணசாமி கூறி வருகிறார். ஆனால் புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் ஆளுநருக்கே அதிக அதிகாரம் என்பதால் புதுவை அரசின் அன்றாட செயல்பாடுகளில் தொடர்ந்து தலையிடுகிறார் கிரண்பேடி. இதற்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த முதல்வர் நாராயணசாமி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆளுநர் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தை நடத்தி வந்தார்.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி திரும்பப் பெறும்வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என போராட்டத்தை தொடங்கிய முதல்வர் நாராயணசாமி. இரவிலும் அங்கேயே படுத்து உறங்கி போராட்டத்தை தொடர்ந்தார்.
இந்நிலையில் 3வது நாளான இன்றும் போராட்டம் தொடர்ந்து. இந்நிலையில் சற்று முன் செயதியாளர்களை சந்தித்த நாராயணசாமி, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஜனவரி 22ஆம் தேதி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்றும், ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்.1 ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
புதுச்சேரியில் பாஜக துணையுடன் இரட்டை ஆட்சி முறையை கிரண்பேடி நடத்தி வந்தார் என்றும் புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு ஆளுநர் கிரண்பேடிதான் காரணம் என்றும் நாராயணசாமி கூறினார். சட்டமன்றம் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்றவும், உரிமையை பறிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications