"ஒருத்தர் அரசியலுக்கு எதுக்கு வந்திருக்கார்னே தெரியல”.. விஜய் மீது சீமான் மறைமுக அட்டாக்!
புதுச்சேரி: முதலீடு செய்து லாபம் கொழிக்கும் தொழிலாக அரசியல் மாறிவிட்டது. இப்போ ஒருத்தர் எதுக்கு வந்துருக்கிறோம் என்று கூட தெரியாமல் வந்திருக்கிறார். சின்னம் எது என்றால் முகம் என்கிறார் என விஜய்யை மறைமுகமாக விமர்சித்துப் பேசியுள்ளார் சீமான்.
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சியின் 28 தொகுதிக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். அப்போது கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான், "புதுச்சேரி, தமிழ்நாட்டில் எல்லாவற்றிற்கும் இலவசம் என்பது வாழ்க்கை தரத்தை உயர்த்தாது. இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல. அது வீழ்ச்சி திட்டம். கவர்ச்சி திட்டம். இலவசம் பெறவேண்டிய ஏழ்மை, வறுமை இல்லாமல் எமது மக்களை உயர்த்த வேண்டும் என்பது எமது கடமை.

படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை. படிக்காதவரே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே இலக்கு. ஆணும், பெண்ணும் சமம். இந்திய கட்சிகளுக்கு மும்மொழி கொள்கை திராவிட கட்சிகளுக்கு இருமொழி கொள்கை, எல்லாம் ஏமாற்றுக் கொள்கை. கொள்கை மொழி தமிழ். தமிழ் பயிற்று மொழி. ஆங்கிலம் கட்டாய பாடமொழி. பயன்பாட்டு, தொடர்பு மொழி. இதுதான் எங்கள் கோட்பாடு.
இதுவரை இந்த மாநிலத்தில் இருந்த அரசியல் அடித்தளத்தை நாம் தமிழ் கட்சியின் கோட்பாடும், தத்துவமும் தகர்க்கிறது. பல ஆண்டுகளாக ஆள் மாற்றம் ஆட்சி மாற்றம், அடிப்படை அமைப்பு அரசியல் அமைப்பு ஆட்சி முறை மாற்றம் வேண்டும், ஊழல், லஞ்சம், கொலை கொள்ளை எல்லாம் தெரிகிறது. அறம்சார்ந்த ஆட்சி வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்திற்கு தனி மாநில அந்தஸ்து வேண்டுமென 16 முறை சட்டசபையில் தீர்மானம் போட்டு இருக்கிறார்கள். இதில் வேறு மத்திய அரசுடன் இங்கு கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கூட்டம் அரசியல் ஆகாது.. கொள்கை தான் அரசியலாகும். வாக்குகளை வாங்குவது, வாக்குகளுக்கு பணம் பெற கூடாதென மக்கள் நினைக்க வேண்டும். முதலீடு செய்து லாபம் கொழிக்கும் தொழிலாக அரசியல் மாறிவிட்டது. தமிழ்நாடு தேர்வாணையம் உள்ளது போல் புதுச்சேரிக்கு தேர்வாணையம் உருவாக்க வேண்டும்.
இப்போ ஒருத்தர் எதுக்கு வந்துருக்கிறோம் என்று கூட தெரியாமல் வந்திருக்கிறார். சின்னம் எது என்றால் முகம் என்பார். நாம் தமிழர் கட்சி தனித்து நின்று போட்டியிடும். நாங்கள் மக்களோடு கூட்டணி வைத்துள்ளோம். வேளாண் குடிமக்கள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒவ்வொரு முறையும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும் ஏன் விவசாயி மட்டும் கடனாளியாக இருக்கிறான்? உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களின் விலையை நிர்ணயிக்க முடியவில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
திரிஷாவுடன் ஒரே காரில் வந்து! அனைத்து வதந்திகளுக்கும் பதிலடி! விஜய்க்கு guts! மோகன் ஜி ஆதரவு! -
யூடர்ன் போட்டு.. டேபிளை உடைச்சு! பழைய திட்டங்களுக்கு ’மரு’ வைத்த விஜய்! சர்க்கார் டயலாக் பொய்யா? -
திருமணத்தின் போது பெண்களுக்கு 8 கிராம் தங்கம்.. ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம்! விஜய் வாக்குறுதி -
விஜயால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? விஷ்ணு பட சூட்டிங்கில் நடந்த சம்பவம்.. விளாசிய பிரபலம் -
"சென்னையில் வீடின்றி தவிக்கிறேன்! நீலாங்கரை வீட்டில் வாழ விஜய் தடுக்கிறார்!" சங்கீதா குற்றச்சாட்டு -
சென்னை நீலாங்கரை வீட்டில் சங்கீதாவை சேர்க்கல.. மனைவியின் கண்ணீரில் நனைந்த விஜயின் மகளிர் வாக்குறுதி -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
விஜய் வீட்டிற்குள் நடந்த தகராறு.. மகனுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு! சங்கீதாவின் பேட்டி வரும்! பிரபலம் ஓபன் -
திரிஷாவை வீட்டுக்குள்ள வச்சிருக்க கூடாதா? யாரை பழிவாங்க இப்படி? விஜய்க்கு குட்டு வைத்த சமுத்திரக்கனி! விரக்தி -
விஜயை சுற்றும் பிரச்சனை.. பெற்றோர் பார்த்த பொண்ணை கல்யாணம் பண்ணுங்க! ரசிகர்களுக்கு கொடுத்த அட்வைஸ் -
"கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும்”.. சங்கீதா மீண்டும் மனு! -
என் நேரடி கண்காணிப்பில், பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கு என தனி இலாக்கா ஒதுக்கப்படும் - விஜய்












Click it and Unblock the Notifications