தமிழக சிலைகளை மீட்டெடுத்த பிரதமருக்கு நன்றி - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரி: தமிழ்நாட்டின் புராதான சிலைகளை மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
Recommended Video
மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன் அரசாங்க திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் மேற்கொண்டு வரும் பணிகளுக்காக மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியை தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பின் போது வெளியுறவுத்துறை சார்பில் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் பற்றி தமிழிசை கேட்டறிந்தார்.
அதேபோல், புதுச்சேரியில் நலிவடைந்த கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவது பற்றியும் பல மத்திய அரசு சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும் புதிய திட்டங்கள் கொண்டு வருவது தொடர்பாகவும் மத்திய அமைச்சருடன் தமிழிசை சௌந்தரராஜன் விவாதித்தார்.
அப்போது மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, தமிழ்நாட்டின் புராதன சிலைகளை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் பற்றி தமிழிசை சௌந்தரராஜனிடம் விளக்கமளித்தார். இதனை கேட்ட அவர், பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தமிழக மக்களின் உணர்வுகளோடு ஒன்றிய தமிழக புராதன சிலைகளை மீட்டெடுத்து ஒப்படைத்ததற்கு மத்திய இணை அமைச்சர் வாயிலாக மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications