புதுவை திருக்காமீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம்.. வடம் பிடித்து இழுத்த கிரண்பேடி, நாராயணசாமி!
புதுச்சேரி: புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் திருக்கோவில் திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகார மோதலில் இருந்து வரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதலமைச்சர் நாராயணசாமியும் ஒன்றாக சேர்ந்து தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
புதுச்சேரி அருகே வில்லியனூர் பகுதியில் உள்ளது 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோகிலாம்பிகை சமேததிருக்காமீஸ்வரர் கோவில் . தென்னக சிவாலயங்களில் பிரசித்தி பெற்றதுமாக விளங்குகிறது கோகிலாம்பிகை சமேததிருக்காமீஸ்வரர் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த பிரமோற்சவ விழா 17-ம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தினமும் இரவில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சாமி காட்சி அளித்தார்

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதலமைச்சர் நாராயணசாமியும் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அமைச்சர்கள் நமச்சிவாயம் கந்தசாமி சபாநாயகர் சிவக்கொழுந்து வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பாலன் தீப்பாய்ந்தான் சுகுமாறன் ஆகியோரும் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

முதலில் விநாயகர் தேர் இழுத்து செல்லப்பட்டது. அதன்பின் திருக்காமீஸ்வரர் அம்மன் தேர் இழுத்துச் செல்லப்பட்டது. காலை 8 மணிக்கு துவங்கிய தேரோட்டம் கோவிலின் 4 மாட வீதிகள் வழியாக வலம் வந்து கல் 1 மணி அளவில் நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதில் புதுச்சேரி மட்டுமின்றி அருகில் உள்ள தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த சில மாதங்களாக அதிகார மோதல் காரணமாக ஆளுநர் கிரண்பேடியும், முதலமைச்சர் நாராயணசாமியும் ஒன்று சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்த நிலையில், இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் இருவரும் ஒன்று சேர்ந்து தேரை வடம்பிடித்து இழுத்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications