புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 70 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் பள்ளி, கல்லூரி மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை சில நாட்களுக்கு மூடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பயணிகள் புதுச்சேரிக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தலா 10 படுக்கைகள் கொண்ட கொரோனா தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, அரசு மார்பக புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பிம்ஸ் தனியார் மருத்துவமனைகளில் தலா ஒருவர் வீதம் மொத்தம் மூன்று பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் கொரோனா வார்டில் வைக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் மூன்று நாட்களில் தெரியவரும் என சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications