புதுவையில் கொடூரம்.. மாடு சண்டைக்காக வயதான தம்பதியை செருப்பால் அடித்த அரசு ஊழியர்!- வீடியோ வைரல்
புதுவை: புதுச்சேரியில் வயதான தம்பதியை நடுரோட்டில் அரசு ஊழியர் ஒருவர் செருப்பால் அடித்த கொடூரச் சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
புதுச்சேரியை அடுத்த தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சுப்புராயன் (65). இவரது மனைவி லட்சுமி (59). இருவரும் ஜெயாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, செக்யூரிட்டி வேலை செய்து வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பு அருகே, ராமலிங்க நகரைச் சேர்ந்த சரவணன் (55) மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் மாடுகள், அடுக்குமாடி குடியிருப்பிற்குள் வருவது தொடர்பாக கணவன், மனைவி இருவரும் கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த சரவணன், நடுரோட்டில் கணவன்-மனைவி இருவரையும் சரமாரியாக செருப்பால் அடித்தார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இது குறித்து சரவணன் மீது கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். போலீசாரால் தேடப்பட்டு வரும் சரவணன், புதுச்சேரி அரசு பொதுபணித்துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications