புற்றுநோய் என் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது.. கௌதமி நெகிழ்ச்சி
புதுச்சேரி: முடியிழந்த புற்று நோயாளிக்கு தானமாக கிடைக்கும் தலைமுடி அவர்களுக்கு வாழ்வில் தன்னம்பிக்கையையும், தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய மனப்பக்குவத்தையும் தரும் என சர்வதேச புற்று நோய் தினத்தில் நடிகை கௌதமி பேச்சு.
இன்று சர்வதேச புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகின்றது. அந்த வகையில் புற்று நோயினால் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளுக்கு ஹிமோ தெரப்பி என்ற சிகிச்சை அளிக்கும்போது அவர்களது தலைமுடி அனைத்தும் உதிர்ந்து போய்விடும். இது குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும்போது நோய்தாக்கம் ஒரு பக்கம் இருப்பின், தலைமுடி இழப்பு அவர்களுக்கு மிகுந்த வேதனையை தருகின்றது.

இதற்காக செயற்கை தலைமுடிகள் பொருத்தப்படுகின்றது. இருப்பினும் மனித உடலில் இருந்து எடுக்கப்படும் தலைமுடியை கொண்டு தயாரிக்கப்படுவது இயற்கையான அனுபவத்தை நோயாளிகளுக்கு கிடைக்கின்றது.
அந்த வகையில் சர்வதேச புற்றுநோய் தினமான இன்று புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் மாணவிகளின் தலைமுடிகளை தானம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நடிகை கௌதமி ஆகியோர் பங்கேற்று புற்று நோயாளிகளுக்காக தலைமுடியை தானமாக வழங்கிய சிறுமி முதல் மருத்துவ மாணவிகள் என 350 பேருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கௌதமி, 15 வருடங்களுக்கு முன்பு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தேன். ஆனால் என்னுடைய தன்னம்பிக்கையால் புற்றுநோயை போராடி எதிர்கொண்டு தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். என்னைப்போன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் வகையில் ஆலோசனைகளை வழங்கி வருகிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், புற்றுநோய் குறித்த பயம் மக்கள் மனதில் இருந்து இன்னும் நீங்கவில்லை. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் மருத்துவமனைகளை அதிகரிக்க வேண்டும் என்றார். அதேபோல் முடியிழந்த புற்று நோயாளிக்கு தானமாக கிடைக்கும் தலைமுடி அவர்களுக்கு வாழ்வில் தன்னம்பிக்கையையும், தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய மனப்பக்குவத்தையும் தரும் என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications