எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு புற்றுநோய்.. புதுவை மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

புதுவை: புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவருக்கு வயது 75. இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாதெமியின் விருதை பெற்றவர்.தமிழக மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை பெற்றவர்.

Writer Prabhanjan admitted in hospital

கடந்த ஓராண்டுக்கு முன் இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு 2 மாத காலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

கடந்த மாதம் 15-ஆம் தேதி அவருக்கு மீண்டும் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டது. இதனால் அவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+