பல மணி நேரத்திற்கு பின்.. மீண்டும் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை.. விராலிமலையில் என்னதான் நடக்கிறது
புதுக்கோட்டை: விராலிமலை தொகுதியில் மின்னணு இயந்திரத்தில் நாடா காணவில்லை என்ற புகார் காரணமாக நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வரை பெரும்பாலான இடங்களில் ஆறு அல்லது ஏழு சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைடைந்துள்ளது.

ஆனால், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதியில் இரண்டு சுற்று வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. திமுக மற்றும் அதிமுக முகவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 6ஆம் நம்பர் மேசையில் இருந்த மின்னணு ஓட்டு பெட்டியில் நாடா இல்லை என்றும் சில இயந்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் தவறாக இருப்பதாகவும் கூறி திமுக, அமுமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், வாக்கு எண்ணிக்கை இயந்திரத்தில் உள்ள அளவீடுக்கும் வாக்கு பதிவான அளவிற்கு மன வித்தியாசம் அதிகமாக இருப்பதாகவும் ஒரு சில வாக்கு இயந்திரங்களில் சீல் உடைக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். இதில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இரண்டு சுற்றுகளில் பதிவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்ட நிலையில், விராலிமலை சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பல மணி நேரத்திற்கு பிறகு தற்போது விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது,
புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை தவிர மற்ற 5 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக முன்னணியில் உள்ளது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications